Tuesday, March 27, 2012

வீட்டுக்காய்கறித் தோட்டம்







காய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உணவை ருசியாக்குகின்றன. ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த நபர், சீரான திட்ட உணவிற்கு ஒரு நாளைக்கு 85 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும். ஆனால் தற்போதைய காய்கறி உற்பத்தியை கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஒரு நபர் ஒரு நாளுக்கு 120 கிராம் காய்கறிகளையே பெற முடிகிறது.

வீட்டுக்காய்கறித் தோட்டம்

மேற்கண்ட கருத்துக்களை மனதில் கொண்டு நாம் நமது அன்றாட வாழ்விற்கு தேவையான காய்கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில், நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர், சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், இதனால் ஏற்படும் சுகாதார கேட்டையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிகிறது. பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ளமுடிகிறது. மிகக் குறைவான இடத்தில் சாகுபடி செய்யப்படுவதால், மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடிகிறது. மேலும் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை செடிகளில் இருந்து அகற்றினால் போதுமானதாகும். இதனால் காய்கறிகளில் நச்சு இரசாயணங்கள் படிவதை தவிர்க்க முடிகிறது.

வீட்டுக்காய்கறி தோட்டத்திற்கான இடம் தேர்வு செய்தல்

வீட்டின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தில் இருக்கும் காலி இடத்தை தேர்வு செய்யலாம். ஏனெனில் குடும்ப நபர்களை கொண்டு முறையாக பராமரிக்கவும், வீட்டின் சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்திக் கொள்ளவும் இது சுலபமாக இருக்கும். காலியாக இருக்கும் இடத்தைப் பொறுத்தும், எத்தனை நபருக்கு காய்கறி தேவைப்படும் என்பதை பொறுத்தும் காய்கறி தோட்டத்தின் அளவு நிர்ணயம் செய்ய வேண்டும். காய்கறித் தோட்டத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் முடிந்தவரை சதுரவடிவத்தைவிட செவ்வக வடிவ வீட்டுக்காய்கறி தோட்டத்தை தேர்வு செய்யலாம். ஊடுபயிர் சாகுபடி மற்றும் தொடர் சாகுபடி முறையை மேற்கொள்ள வேண்டும். நான்கு அல்லது ஐந்து நபர்கள் உள்ள ஒரு சராசரி குடும்பத்திற்கு தேவைப்படும் காய்கறியை உற்பத்தி செய்ய 5 சென்ட் இடம் இருந்தால் போதுமானதாகும்.

நிலம் தயார் செய்தல்

நிலத்தை 30-40 செமீ ஆழத்திற்கு மண்வெட்டி கொண்டு கிளறிவிட வேண்டும். கற்கள், புதர்கள், களைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு எருவை இட்டு நன்கு கலக்கி விட வேண்டும். தேவைக்கேற்ப 45 செமீ ஜ் 60 செமீ என்ற இடைவெளியில் பார்சால் அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் படுக்கை முறையிலும் சாகுபடி செய்யலாம்.

விதைத்தல் மற்றும் நடவு செய்தல்
நேரடி விதைப்பு பயிர்களான வெண்டை, கொத்தவரை மற்றும் தட்டைப்பயறு போன்றவற்றை பாரின் ஒரு புறத்தில் 30 செமீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். முழு செடியாக பிடுங்கப்படும் அல்லது அறுவடை செய்யப்படும் தண்டுக்கீரை, சிறுகீரை ஆகியவற்றை, 1 பகுதி விதை 20 பகுதி மணல் என்ற விகிதத்தில் கலந்து கை விதைப்பு செய்யவேண்டும். சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி போன்றவற்றை வரப்பின் ஓரத்தில் நட வேண்டும்.
நாற்று நடவு செய்யும் பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றை நாற்றங்கால் படுக்கைகளில் அல்லது தொட்டிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே விதைக்க வேண்டும். விதைப்பு முடிந்து மண்ணை மூடியவுடன், எறும்பு வருவதை தடுக்க 250 கிராம் வேப்பம்புண்ணாக்கை தூவவேண்டும். விதைத்து 30 நாட்கள் கழித்து தக்காளியையும், 40-45 நாட்கள் கழித்து கத்தரி, மிளகாய், சிறு வெங்காயம் ஆகியவற்றையும் நாற்றங்களில் இருந்து எடுத்து நடவு செய்ய வேண்டும். தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றிற்கு 30-45 செமீ என்ற இடைவெளியில் பாரின் ஒரு பக்கத்திலும், சின்ன வெங்காயத்திற்கு 10 செமீ இடைவெளியில் பாரின் இரு பக்கமும் நட வேண்டும்.

நடவு செய்தவுடன் முதல் தண்ணீரும் நட்ட மூன்றாம் நாள் மறுதண்ணீரும் பாய்ச்ச வேண்டும். நாற்றுகளுக்கு இளம் பருவங்களில் இரு நாட்களுக்கு ஒரு முறையும், பிற்பருவங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு வருடத்திற்கு, வீட்டுச்செலவுக்கு தேவைப்படும் காய்கறிகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதே வீட்டு காய்கறி தோட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சில முக்கிய வழிமுறைகளை கையாண்டு இந்த நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும்.

தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும்.

ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும்.

பலவருட பயிர்கள்

முருங்கை, வாழை, பப்பாளி, கப்பக்கிழங்கு, கருவேற்பிலை, அகத்தி.

பயிரிடும் திட்டம்

இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை (மலை பகுதி தவிர)
பாத்தி எண்
காய்கறியின் பெயர்
பருவம்
01.
தக்காளி மற்றும் வெங்காயம்
ஜுன் - செப்டம்பர்
முள்ளங்கி
அக்டோபர் - நவம்பர்
பீன்ஸ்
டிசம்பர் - பிப்ரவரி
வெண்டைக்காய்
மார்ச் - மே
02.
கத்தரி
ஜுன் - செப்டம்பர்
பீன்ஸ்
அக்டோபர் - நவம்பர்
தக்காளி
ஜுன் - செப்டம்பர்
தண்டுகீரை, சிறுகீரை
மே
03.
மிளகாய் மற்றும் முள்ளங்கி
ஜுன் - செப்டம்பர்
தட்டவரை / காராமணி
டிசம்பர் - பிப்ரவரி
பெல்லாரி வெங்காயம்
மார்ச் - மே
04.
வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி
ஜுன் - ஆகஸ்டு
முட்டைக்கோஸ்
செப்டம்பர் - டிசம்பர்
கொத்தவரை
ஜனவரி - மார்ச்
05.
பெரிய வெங்காயம்
ஜுன் - ஆகஸ்டு
பீட்ருட்
செப்டம்பர் - நவம்பர்
தக்காளி
டிசம்பர் - மார்ச்
வெங்காயம்
ஏப்ரல் - மே
06.
கொத்தவரை
ஜுன் - செப்டம்பர்
கத்தரி மற்றும் பீட்ருட்
அக்டோபர் - ஜனவரி
07.
பெரிய வெங்காயம்
ஜுலை - ஆகஸ்டு
கேரட்
செப்டம்பர் - டிசம்பர்
பூசணி
ஜனவரி - மார்ச்
08.
மொச்சை, அவரை
ஜுன் - ஆகஸ்டு
வெங்காயம்
ஜனவரி - ஆகஸ்டு
வெண்டைக்காய்
செப்டம்பர் - டிசம்பர்
கொத்தமல்லி
ஏப்ரல் - மே

மேற்கண்ட திட்டமுறையில் வருடம் முழுவதிற்கும் ஒவ்வொரு பாத்தியிலும் சில பயிர்களை இடைவிடாது இடம் பெறச்செய்யப்பட்டுள்ளன. முடிந்த அளவு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு நெடுங்கால பயிரும், குறுகிய கால பயிரும் இணைக்கப்பட்டுள்ளன.

காய்கறி தோட்டத்தின் பயன்கள்

முதலில் தங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை பூர்த்தி செய்து கொண்டு, பின்னர் அளவுக்கு அதிகமாக உள்ளவற்றை விற்கவும் அல்லது பண்டம் மாற்றி கொள்ளவும் செய்யலாம். சில சமயங்களில், வருமானம் ஈட்டுவதே காய்கறி தோட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகிவிடுகிறது. எந்த சமயத்திலும் ஒரு நல்ல ஊட்டச்சத்தின் அவசியத்தை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஊட்டச்சத்தும், வருவாய் ஈட்டுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையனவாகும்.

வீட்டு காய்கறி தோட்டத்தின் பொருளாதார ஆதாயங்களும் பயன்களும்

காய்கறி மற்றும் வருமானம் ஆகிய இரண்டு ஆதாயங்களும் வீட்டு காய்கறி தோட்டத்தில் கிடைக்கிறது.

வீட்டில் பராமரிக்கப்படும் கால்நடைக்கு தேவையான தீவனமும் மற்றும் ஏனைய வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் விறகு போன்ற மூலப்பொருட்களும் கிடைக்கின்றன.

வீட்டுக்காய்கறி தோட்டத்துடன் கூடவே கால்நடை வளர்ப்பு, பெண்கள் சுயவருமானம் பெறுவதற்கு மூலாதாரமாக அமைகின்றது.

அருகம்புல்

அருகம்புல்





வயல் வரப்புகள்,தரிசு நிலங்களில் அதிகமாக வளரகூடியது அருகம்புல் பெரியோர்கள் முதல் சிரியவர்கள் வரை இப்புல்லை தெரியதவர்கள் இருக்கமுடியது..

ருகு, பதம், தூர்வை, மேகாரி, மூதண்டம்... என்ன இது, புரியாத பெயர்களின் அணிவகுப்பாக இருக்கிறதே என ஆச்சர்யப்பட வேண்டாம். அருகம்புல்லுக்குத்தான் இத்தனை பெயர்கள்!
புல் வகையைச் சேர்ந்த இந்தச் சிறு செடியின் மருத்துவக் குணங்கள் ஏராளம். குளிர்ச்சியான தன்மையைக்கொண்ட அருகம்புல் இனிப்புச் சுவை உடையது. மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் அருகம்புல் சுகாதாரமான வாழிடங்களில் இருந்து சேகரிக்கப்படுதல் அவசியம்.


இனிப்பு சுவையும் குளிர்ச்சி தன்மையும் கொண்ட தாவரம் ஆகும்.
கைப்பிடி அருகம்புல்லை பரித்து சுத்தம் செய்து.ஒன்று இரண்டாக நறுக்கி நான்கு தம்ளர் தண்ணீரில், சிறிது மிளகுத்துள் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.ஒரு தம்ளராக வரும் வரை நன்றாக காய்ச்சி வடிக்கட்டி கொள்ள வேண்டும்.தேவையான அளவு பனகற்கண்டு சேர்த்து, இளஞ்சுாடக தினமும் இருவேளை குடித்து வந்தால் வெள்ளைபடுதல் தீரும்..

சேகரிக்கப்பட்ட அருகம்புல்லுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்த்து வந்தால் சொறி,சிரங்கு மாறும்.இவ்வாறு தேய்த்த பின்பு ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

கைப்பிடி அருகம்புல்லை தண்ணீரில் கழுவி அரைத்து,காய்ச்சாத ஆட்டுபாலில் கலந்து தொடர்ந்து 2 மதாங்கள் குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி கட்டுபடும்.

அருகம்புல் சாறு 20 மி்ல்லி தண்ணீர் 20 மில்லி, அரை தேக்கரண்டி சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் வரை குடித்து வந்தால் வயிற்றுபுண் நோய் குணமாகி வரும்.

சுத்தமான இடத்தில் வளரும் அருகம்புல்லை மட்டும் மருத்துவத்துக்கு  பயன்படுத்த வேண்டும்

இரத்த மூலத்தை கட்டுபடுத்தி, இரத்தத்தை  சுத்தம் அடைய செய்யும் பண்பும் இந்த மூலிகை்கு உண்டு




உண்ணா நோன்பால் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகள்...






உண்ணா நோன்பு உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை கொண்டு வருகின்றது. வரம்பு மீறாத உண்ணாநோன்பால் நமது மூளை அதிக விழிப்புணர்ச்சியை அடைகிறது என்று கூறுவர். உண்ண ஏதுமின்றி பசித்திருப்போருக்கு வேறு வழியில்லை. எல்லாம் இருந்தும் உண்ணாமல் பசித்து இருப்பது என்பது உடல் கட்டுப்பாடு, உணர்வு கட்டுபாடு ஆகியவற்றால் மூளை செயல்பாடுகளை வளர்த்து உயிரை தழைக்க செய்யவே. உடல் நலத்தோடு உள்ளவர்கள் வழக்கமாக உண்பதைவிடக் குறைவாக உண்ணலாமா? நிச்சயமாக உண்ணலாம். பொதுவாக நமக்கு ஒரு நாளைக்கு 2600 கலோரிகள் தேவை. குறைந்தது 1300 முதல் 1500 கலோரி வரையே போதுமானது. நாம் உண்ணும் உணவு வகைகள் சத்துணவாக இருந்தால் அவற்றில் பாதியளவு உண்டாலே போதுமானது. உடல் நலம் பெற உணவு பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளை பற்றி இன்று அறிய தருகின்றேன். 

வயது அதிகமாக ஆக, ஆண்களும் பெண்களும் தாங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவிலுள்ள கலோரி அளவை குறைத்தால் உடல் நலத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்க முடியும் என்று ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில் வழக்கமான உணவிலுள்ள கலோரி அளவில் ஏறக்குறைய 30 விழுக்காடு குறைத்தவர்கள், பின்னர் நடத்தப்பட்ட நினைவாற்றல் சோதனையில் நன்றாக தேறி இதை உறுதி செய்துள்ளனர். இந்த ஆய்வு பற்றி குறிப்பிடும்போது வயதாகும் வேளையில் உடல் நலத்தையும் நினைவாற்றலையும் வளர்க்க எதையெல்லாம் செய்யக் கூடாது என்பது பற்றிய ஆய்வுகளில் ஒன்று தான் இது என்று முன்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் முனைவர் எ. வெரோணிக்காவும், அவரது குழுவினரும் தேசிய அறிவியல் கழக இதழில் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆய்வை அவர்கள் முதலில் எலிகளை வைத்து நடத்தினர். எளிதாக கரைந்துபோகும் கொழுப்பமிலங்கள் கொண்ட ஆலீவ் மற்றும் கலோரி அளவு குறைந்த எண்ணெய், மீன்கள் ஆகியவற்றை இவ்வாய்வில் பயன்படுத்தினர். இவற்றை உட்கொள்வது வயதான எலிகளின் மூளை செயல்பாடுகளுக்கு நல்லதாகவும், நினைவாற்றலை வளர்க்க உதவுவதும் தெரியவந்தது. இதேபோன்ற விளைவுகள் மனிதரில் ஏற்படுமா? என்றறிய ஆய்வாளர்கள் முற்பட்டனர். அதற்கு 60 வயதான சராசரி எடையுடைய 50 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களை மூன்று குழுக்களாக பிரித்து இந்த ஆய்வை நடத்தினர். ஒரு குழுவுக்கு 30 விழுக்காடு குறைவான கலோரி அளவுடைய உணவுகள் வழங்கப்பட்டன. இரண்டாவது குழுவினருக்கு அளிக்கப்பட்ட உணவு வகைகளில் எளிதாக கரைந்துவிடக்கூடிய கொழுப்பமில உணவுகள் 20 விழுக்காடு அதிகமாக இருந்தன. மூன்றாவது குழுவினருக்கு வழக்கமாக உடகொள்ளும் உணவே பரிமாறப்பட்டது. மூன்று திங்கள் காலம் இந்த உணவு பழக்கம் தொடர்ந்தது. பிறகு நடத்தப்பட்ட ஆய்வில், உணவில் 30 விழுக்காடு கலோரி அளவு குறைக்கப்பட்ட குழுவினருக்கு சொற்கள் தொடர்பான நினைவாற்றலில் 20 விழுக்காடு கூடுதலான வளர்ச்சி காணப்பட்டது. மாறாக பிற இரண்டு குழுக்களிடமும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. 

30 விழுக்காடு கலோரி அளவு உணவு குறைவாக வழங்கப்பட்ட குழுவினர் நினைவாற்றலில் வளர்ச்சியடைந்த அதேவேளையில் இன்சுலின் அளவு மற்றும் உடல் வீக்க அறிகுறிகள் குறைவதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகளின் படி, வயது அதிகமாகின்றபோது உண்ணுகின்ற உணவுகளில் கலோரி அளவை குறைத்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முதிய வயதில் நலமான வாழ்வை பெற மேற்கொள்ளப்படும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை வளர்க்க உதவும். 

உணவு தொடர்பாக நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில் பசியை கட்டுப்படுத்துவதில் பெண்களை விட ஆண்களே அதிக திறமையானவர்கள் என தெரியவந்துள்ளது. பசியோடு இருக்கும்போது தாங்கள் விரும்பிய உணவை ஒரு தட்டில் வைத்தால், அதை உட்கொள்ளமால் இருக்க பெண்களுக்கு சற்று கடினமாக இருக்குமாம். உணவை உட்கொள்வதற்கு ஏற்படும் உந்துதலை கட்டுப்படுத்துவதில் பெண்கள் தவிக்கத்தான் செய்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. பெண்கள் சீரற்ற உணவு பழக்கங்களை வளர்த்து கொள்வதையும் ஆண்கள் தங்கள் எடையை எளிதாக குறைக்க முடிவதற்கான காரணத்தையும் இதன் மூலம் அவர்கள் விளக்கியுள்ளனர். அதாவது, பெண்கள் பசியாக இருக்கும் நேரத்தில் கலோரி அளவு, ஊட்டசத்து, கொழுப்பு சத்து என எதையும் கவனிக்காமல் அந்த நேரத்தில் கிடைக்கும் உணவை உண்டுவிடுகின்ற காரணத்தை இந்த ஆய்வு விளக்குகிறது. 

ஒருவர் ஆணா இருப்பதோ அல்லது பெண் இருப்பதோ பசியை தாங்கி கொள்ளும் ஆற்றலில் செல்வாக்கு ஏற்படுத்துமா? என்று அறிய ஆண்கள் மற்றும் பெண்களின் மூளை செயல்பாடுகள் ஒப்பிடப்பட்டு ஆராயப்பட்டன. நலமான மற்றும் உடல் பருமனில்லாத தொண்டர்களை 17 மணிநேரம் உண்ணாமல் இருக்க ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு மிகவும் விருப்பமான உணவு வகைகளை அவர்களுக்கு முன் வைத்தனர். பசித்த பின் புசி என்பார்கள். ஆனால், அந்த பசியின் கொடுமையிலும், அருகில் விரும்பிய உணவு வகைகள் இருந்தபோதும், பசியை கட்டுப்படுத்திக் கொண்டு உண்ணமுடியாத மரம், கல், மண் போன்றவற்றை நினைக்க ஆய்வாளர்கள் கூறினர். நியூயார்க்கிலுள்ள Brookhaven தேசிய ஆய்வகத்தில் இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் Gene-Jack Wang தொண்டர்களின் மூளை செயல்பாடுகளை வரிமம் செய்தார். அதன்மூலம் பசியோடு இருக்கின்றபோது அருகிலிருக்கும் உணவு எவ்விதமான தூண்டுதலை மூளையில் ஏற்படுத்துகிறது என்று சோதித்தார். 

17 மணிநேரம் பசியோடு இருந்தபோதான மூளையின் செயல்பாடுகளை விட, ஆண்கள் கண்முன் உணவிருக்க சாப்பிட முடியாமல் கல்லையும் மண்ணையும் நினைத்து பசியை அடக்க வேண்டிய நிலையில் அந்த செயல்பாடுகள் குறைந்திருந்தன. ஆனால் பெண்களை பொறுத்த வரை முன்பிருந்த மூளை செயல்பாடுகளில் எந்த மாறுதல்களும் காணப்படவில்லை. எனவே பசியின்போதும் ஆண்களால் உணவு பழக்கத்தை எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்றும் பெண்களால் அது அவ்வளவு சாத்தியமில்லை என்றும் அறிய வந்தனர். இந்த ஆய்வு தேசிய அறிவியல் கழக இதழில் வெளியாயிற்று. 

உணவு ஆசைகளில் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியாததே பெண்கள் எடை குறைக்க மேற்கொள்ளும் உணவு கட்டுப்பாடு முயற்சிகளில் வெற்றிபெற முடியாமல் போகிறது என்று மருத்துவர் Wang குறிப்பிட்டார். இவ்வாறு பசியை தாங்கிகொள்ளாத நிலை தான் உடல் பருமன் மற்றும் சீரற்ற உணவு பழக்கவழக்கங்களை பெண்களில் அதிகம் ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். பசிக்கிறது அதனால் உண்டோம் என்றில்லாமல் முதிய வயதில் நாம் உட்கொள்ளும் கலோரி அளவை குறைத்து கொள்வதும், பசியோடு இருக்கும்போது உணவை உண்பதில் நம்மில் ஏற்படும் தூண்டுதலை உணர்ந்து செயல்படுவதும் நமது நாளைய உடல்நலத்திற்கு நன்மை பயக்கும்.

உண்ணா நோன்பால் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகள்...






உண்ணா நோன்பு உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை கொண்டு வருகின்றது. வரம்பு மீறாத உண்ணாநோன்பால் நமது மூளை அதிக விழிப்புணர்ச்சியை அடைகிறது என்று கூறுவர். உண்ண ஏதுமின்றி பசித்திருப்போருக்கு வேறு வழியில்லை. எல்லாம் இருந்தும் உண்ணாமல் பசித்து இருப்பது என்பது உடல் கட்டுப்பாடு, உணர்வு கட்டுபாடு ஆகியவற்றால் மூளை செயல்பாடுகளை வளர்த்து உயிரை தழைக்க செய்யவே. உடல் நலத்தோடு உள்ளவர்கள் வழக்கமாக உண்பதைவிடக் குறைவாக உண்ணலாமா? நிச்சயமாக உண்ணலாம். பொதுவாக நமக்கு ஒரு நாளைக்கு 2600 கலோரிகள் தேவை. குறைந்தது 1300 முதல் 1500 கலோரி வரையே போதுமானது. நாம் உண்ணும் உணவு வகைகள் சத்துணவாக இருந்தால் அவற்றில் பாதியளவு உண்டாலே போதுமானது. உடல் நலம் பெற உணவு பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளை பற்றி இன்று அறிய தருகின்றேன். 

வயது அதிகமாக ஆக, ஆண்களும் பெண்களும் தாங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவிலுள்ள கலோரி அளவை குறைத்தால் உடல் நலத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்க முடியும் என்று ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில் வழக்கமான உணவிலுள்ள கலோரி அளவில் ஏறக்குறைய 30 விழுக்காடு குறைத்தவர்கள், பின்னர் நடத்தப்பட்ட நினைவாற்றல் சோதனையில் நன்றாக தேறி இதை உறுதி செய்துள்ளனர். இந்த ஆய்வு பற்றி குறிப்பிடும்போது வயதாகும் வேளையில் உடல் நலத்தையும் நினைவாற்றலையும் வளர்க்க எதையெல்லாம் செய்யக் கூடாது என்பது பற்றிய ஆய்வுகளில் ஒன்று தான் இது என்று முன்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் முனைவர் எ. வெரோணிக்காவும், அவரது குழுவினரும் தேசிய அறிவியல் கழக இதழில் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆய்வை அவர்கள் முதலில் எலிகளை வைத்து நடத்தினர். எளிதாக கரைந்துபோகும் கொழுப்பமிலங்கள் கொண்ட ஆலீவ் மற்றும் கலோரி அளவு குறைந்த எண்ணெய், மீன்கள் ஆகியவற்றை இவ்வாய்வில் பயன்படுத்தினர். இவற்றை உட்கொள்வது வயதான எலிகளின் மூளை செயல்பாடுகளுக்கு நல்லதாகவும், நினைவாற்றலை வளர்க்க உதவுவதும் தெரியவந்தது. இதேபோன்ற விளைவுகள் மனிதரில் ஏற்படுமா? என்றறிய ஆய்வாளர்கள் முற்பட்டனர். அதற்கு 60 வயதான சராசரி எடையுடைய 50 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களை மூன்று குழுக்களாக பிரித்து இந்த ஆய்வை நடத்தினர். ஒரு குழுவுக்கு 30 விழுக்காடு குறைவான கலோரி அளவுடைய உணவுகள் வழங்கப்பட்டன. இரண்டாவது குழுவினருக்கு அளிக்கப்பட்ட உணவு வகைகளில் எளிதாக கரைந்துவிடக்கூடிய கொழுப்பமில உணவுகள் 20 விழுக்காடு அதிகமாக இருந்தன. மூன்றாவது குழுவினருக்கு வழக்கமாக உடகொள்ளும் உணவே பரிமாறப்பட்டது. மூன்று திங்கள் காலம் இந்த உணவு பழக்கம் தொடர்ந்தது. பிறகு நடத்தப்பட்ட ஆய்வில், உணவில் 30 விழுக்காடு கலோரி அளவு குறைக்கப்பட்ட குழுவினருக்கு சொற்கள் தொடர்பான நினைவாற்றலில் 20 விழுக்காடு கூடுதலான வளர்ச்சி காணப்பட்டது. மாறாக பிற இரண்டு குழுக்களிடமும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. 

30 விழுக்காடு கலோரி அளவு உணவு குறைவாக வழங்கப்பட்ட குழுவினர் நினைவாற்றலில் வளர்ச்சியடைந்த அதேவேளையில் இன்சுலின் அளவு மற்றும் உடல் வீக்க அறிகுறிகள் குறைவதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகளின் படி, வயது அதிகமாகின்றபோது உண்ணுகின்ற உணவுகளில் கலோரி அளவை குறைத்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முதிய வயதில் நலமான வாழ்வை பெற மேற்கொள்ளப்படும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை வளர்க்க உதவும். 

உணவு தொடர்பாக நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில் பசியை கட்டுப்படுத்துவதில் பெண்களை விட ஆண்களே அதிக திறமையானவர்கள் என தெரியவந்துள்ளது. பசியோடு இருக்கும்போது தாங்கள் விரும்பிய உணவை ஒரு தட்டில் வைத்தால், அதை உட்கொள்ளமால் இருக்க பெண்களுக்கு சற்று கடினமாக இருக்குமாம். உணவை உட்கொள்வதற்கு ஏற்படும் உந்துதலை கட்டுப்படுத்துவதில் பெண்கள் தவிக்கத்தான் செய்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. பெண்கள் சீரற்ற உணவு பழக்கங்களை வளர்த்து கொள்வதையும் ஆண்கள் தங்கள் எடையை எளிதாக குறைக்க முடிவதற்கான காரணத்தையும் இதன் மூலம் அவர்கள் விளக்கியுள்ளனர். அதாவது, பெண்கள் பசியாக இருக்கும் நேரத்தில் கலோரி அளவு, ஊட்டசத்து, கொழுப்பு சத்து என எதையும் கவனிக்காமல் அந்த நேரத்தில் கிடைக்கும் உணவை உண்டுவிடுகின்ற காரணத்தை இந்த ஆய்வு விளக்குகிறது. 

ஒருவர் ஆணா இருப்பதோ அல்லது பெண் இருப்பதோ பசியை தாங்கி கொள்ளும் ஆற்றலில் செல்வாக்கு ஏற்படுத்துமா? என்று அறிய ஆண்கள் மற்றும் பெண்களின் மூளை செயல்பாடுகள் ஒப்பிடப்பட்டு ஆராயப்பட்டன. நலமான மற்றும் உடல் பருமனில்லாத தொண்டர்களை 17 மணிநேரம் உண்ணாமல் இருக்க ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு மிகவும் விருப்பமான உணவு வகைகளை அவர்களுக்கு முன் வைத்தனர். பசித்த பின் புசி என்பார்கள். ஆனால், அந்த பசியின் கொடுமையிலும், அருகில் விரும்பிய உணவு வகைகள் இருந்தபோதும், பசியை கட்டுப்படுத்திக் கொண்டு உண்ணமுடியாத மரம், கல், மண் போன்றவற்றை நினைக்க ஆய்வாளர்கள் கூறினர். நியூயார்க்கிலுள்ள Brookhaven தேசிய ஆய்வகத்தில் இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் Gene-Jack Wang தொண்டர்களின் மூளை செயல்பாடுகளை வரிமம் செய்தார். அதன்மூலம் பசியோடு இருக்கின்றபோது அருகிலிருக்கும் உணவு எவ்விதமான தூண்டுதலை மூளையில் ஏற்படுத்துகிறது என்று சோதித்தார். 

17 மணிநேரம் பசியோடு இருந்தபோதான மூளையின் செயல்பாடுகளை விட, ஆண்கள் கண்முன் உணவிருக்க சாப்பிட முடியாமல் கல்லையும் மண்ணையும் நினைத்து பசியை அடக்க வேண்டிய நிலையில் அந்த செயல்பாடுகள் குறைந்திருந்தன. ஆனால் பெண்களை பொறுத்த வரை முன்பிருந்த மூளை செயல்பாடுகளில் எந்த மாறுதல்களும் காணப்படவில்லை. எனவே பசியின்போதும் ஆண்களால் உணவு பழக்கத்தை எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்றும் பெண்களால் அது அவ்வளவு சாத்தியமில்லை என்றும் அறிய வந்தனர். இந்த ஆய்வு தேசிய அறிவியல் கழக இதழில் வெளியாயிற்று. 

உணவு ஆசைகளில் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியாததே பெண்கள் எடை குறைக்க மேற்கொள்ளும் உணவு கட்டுப்பாடு முயற்சிகளில் வெற்றிபெற முடியாமல் போகிறது என்று மருத்துவர் Wang குறிப்பிட்டார். இவ்வாறு பசியை தாங்கிகொள்ளாத நிலை தான் உடல் பருமன் மற்றும் சீரற்ற உணவு பழக்கவழக்கங்களை பெண்களில் அதிகம் ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். பசிக்கிறது அதனால் உண்டோம் என்றில்லாமல் முதிய வயதில் நாம் உட்கொள்ளும் கலோரி அளவை குறைத்து கொள்வதும், பசியோடு இருக்கும்போது உணவை உண்பதில் நம்மில் ஏற்படும் தூண்டுதலை உணர்ந்து செயல்படுவதும் நமது நாளைய உடல்நலத்திற்கு நன்மை பயக்கும்.

உண்ணா நோன்பால் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகள்







உண்ணா நோன்பு உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை கொண்டு வருகின்றது. வரம்பு மீறாத உண்ணாநோன்பால் நமது மூளை அதிக விழிப்புணர்ச்சியை அடைகிறது என்று கூறுவர். உண்ண ஏதுமின்றி பசித்திருப்போருக்கு வேறு வழியில்லை. எல்லாம் இருந்தும் உண்ணாமல் பசித்து இருப்பது என்பது உடல் கட்டுப்பாடு, உணர்வு கட்டுபாடு ஆகியவற்றால் மூளை செயல்பாடுகளை வளர்த்து உயிரை தழைக்க செய்யவே. உடல் நலத்தோடு உள்ளவர்கள் வழக்கமாக உண்பதைவிடக் குறைவாக உண்ணலாமா? நிச்சயமாக உண்ணலாம். பொதுவாக நமக்கு ஒரு நாளைக்கு 2600 கலோரிகள் தேவை. குறைந்தது 1300 முதல் 1500 கலோரி வரையே போதுமானது. நாம் உண்ணும் உணவு வகைகள் சத்துணவாக இருந்தால் அவற்றில் பாதியளவு உண்டாலே போதுமானது. உடல் நலம் பெற உணவு பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளை பற்றி இன்று அறிய தருகின்றேன். 

வயது அதிகமாக ஆக, ஆண்களும் பெண்களும் தாங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவிலுள்ள கலோரி அளவை குறைத்தால் உடல் நலத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்க முடியும் என்று ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில் வழக்கமான உணவிலுள்ள கலோரி அளவில் ஏறக்குறைய 30 விழுக்காடு குறைத்தவர்கள், பின்னர் நடத்தப்பட்ட நினைவாற்றல் சோதனையில் நன்றாக தேறி இதை உறுதி செய்துள்ளனர். இந்த ஆய்வு பற்றி குறிப்பிடும்போது வயதாகும் வேளையில் உடல் நலத்தையும் நினைவாற்றலையும் வளர்க்க எதையெல்லாம் செய்யக் கூடாது என்பது பற்றிய ஆய்வுகளில் ஒன்று தான் இது என்று முன்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் முனைவர் எ. வெரோணிக்காவும், அவரது குழுவினரும் தேசிய அறிவியல் கழக இதழில் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆய்வை அவர்கள் முதலில் எலிகளை வைத்து நடத்தினர். எளிதாக கரைந்துபோகும் கொழுப்பமிலங்கள் கொண்ட ஆலீவ் மற்றும் கலோரி அளவு குறைந்த எண்ணெய், மீன்கள் ஆகியவற்றை இவ்வாய்வில் பயன்படுத்தினர். இவற்றை உட்கொள்வது வயதான எலிகளின் மூளை செயல்பாடுகளுக்கு நல்லதாகவும், நினைவாற்றலை வளர்க்க உதவுவதும் தெரியவந்தது. இதேபோன்ற விளைவுகள் மனிதரில் ஏற்படுமா? என்றறிய ஆய்வாளர்கள் முற்பட்டனர். அதற்கு 60 வயதான சராசரி எடையுடைய 50 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களை மூன்று குழுக்களாக பிரித்து இந்த ஆய்வை நடத்தினர். ஒரு குழுவுக்கு 30 விழுக்காடு குறைவான கலோரி அளவுடைய உணவுகள் வழங்கப்பட்டன. இரண்டாவது குழுவினருக்கு அளிக்கப்பட்ட உணவு வகைகளில் எளிதாக கரைந்துவிடக்கூடிய கொழுப்பமில உணவுகள் 20 விழுக்காடு அதிகமாக இருந்தன. மூன்றாவது குழுவினருக்கு வழக்கமாக உடகொள்ளும் உணவே பரிமாறப்பட்டது. மூன்று திங்கள் காலம் இந்த உணவு பழக்கம் தொடர்ந்தது. பிறகு நடத்தப்பட்ட ஆய்வில், உணவில் 30 விழுக்காடு கலோரி அளவு குறைக்கப்பட்ட குழுவினருக்கு சொற்கள் தொடர்பான நினைவாற்றலில் 20 விழுக்காடு கூடுதலான வளர்ச்சி காணப்பட்டது. மாறாக பிற இரண்டு குழுக்களிடமும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. 

30 விழுக்காடு கலோரி அளவு உணவு குறைவாக வழங்கப்பட்ட குழுவினர் நினைவாற்றலில் வளர்ச்சியடைந்த அதேவேளையில் இன்சுலின் அளவு மற்றும் உடல் வீக்க அறிகுறிகள் குறைவதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகளின் படி, வயது அதிகமாகின்றபோது உண்ணுகின்ற உணவுகளில் கலோரி அளவை குறைத்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முதிய வயதில் நலமான வாழ்வை பெற மேற்கொள்ளப்படும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை வளர்க்க உதவும். 

உணவு தொடர்பாக நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில் பசியை கட்டுப்படுத்துவதில் பெண்களை விட ஆண்களே அதிக திறமையானவர்கள் என தெரியவந்துள்ளது. பசியோடு இருக்கும்போது தாங்கள் விரும்பிய உணவை ஒரு தட்டில் வைத்தால், அதை உட்கொள்ளமால் இருக்க பெண்களுக்கு சற்று கடினமாக இருக்குமாம். உணவை உட்கொள்வதற்கு ஏற்படும் உந்துதலை கட்டுப்படுத்துவதில் பெண்கள் தவிக்கத்தான் செய்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. பெண்கள் சீரற்ற உணவு பழக்கங்களை வளர்த்து கொள்வதையும் ஆண்கள் தங்கள் எடையை எளிதாக குறைக்க முடிவதற்கான காரணத்தையும் இதன் மூலம் அவர்கள் விளக்கியுள்ளனர். அதாவது, பெண்கள் பசியாக இருக்கும் நேரத்தில் கலோரி அளவு, ஊட்டசத்து, கொழுப்பு சத்து என எதையும் கவனிக்காமல் அந்த நேரத்தில் கிடைக்கும் உணவை உண்டுவிடுகின்ற காரணத்தை இந்த ஆய்வு விளக்குகிறது. 

ஒருவர் ஆணா இருப்பதோ அல்லது பெண் இருப்பதோ பசியை தாங்கி கொள்ளும் ஆற்றலில் செல்வாக்கு ஏற்படுத்துமா? என்று அறிய ஆண்கள் மற்றும் பெண்களின் மூளை செயல்பாடுகள் ஒப்பிடப்பட்டு ஆராயப்பட்டன. நலமான மற்றும் உடல் பருமனில்லாத தொண்டர்களை 17 மணிநேரம் உண்ணாமல் இருக்க ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு மிகவும் விருப்பமான உணவு வகைகளை அவர்களுக்கு முன் வைத்தனர். பசித்த பின் புசி என்பார்கள். ஆனால், அந்த பசியின் கொடுமையிலும், அருகில் விரும்பிய உணவு வகைகள் இருந்தபோதும், பசியை கட்டுப்படுத்திக் கொண்டு உண்ணமுடியாத மரம், கல், மண் போன்றவற்றை நினைக்க ஆய்வாளர்கள் கூறினர். நியூயார்க்கிலுள்ள Brookhaven தேசிய ஆய்வகத்தில் இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் Gene-Jack Wang தொண்டர்களின் மூளை செயல்பாடுகளை வரிமம் செய்தார். அதன்மூலம் பசியோடு இருக்கின்றபோது அருகிலிருக்கும் உணவு எவ்விதமான தூண்டுதலை மூளையில் ஏற்படுத்துகிறது என்று சோதித்தார். 

17 மணிநேரம் பசியோடு இருந்தபோதான மூளையின் செயல்பாடுகளை விட, ஆண்கள் கண்முன் உணவிருக்க சாப்பிட முடியாமல் கல்லையும் மண்ணையும் நினைத்து பசியை அடக்க வேண்டிய நிலையில் அந்த செயல்பாடுகள் குறைந்திருந்தன. ஆனால் பெண்களை பொறுத்த வரை முன்பிருந்த மூளை செயல்பாடுகளில் எந்த மாறுதல்களும் காணப்படவில்லை. எனவே பசியின்போதும் ஆண்களால் உணவு பழக்கத்தை எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்றும் பெண்களால் அது அவ்வளவு சாத்தியமில்லை என்றும் அறிய வந்தனர். இந்த ஆய்வு தேசிய அறிவியல் கழக இதழில் வெளியாயிற்று. 

உணவு ஆசைகளில் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியாததே பெண்கள் எடை குறைக்க மேற்கொள்ளும் உணவு கட்டுப்பாடு முயற்சிகளில் வெற்றிபெற முடியாமல் போகிறது என்று மருத்துவர் Wang குறிப்பிட்டார். இவ்வாறு பசியை தாங்கிகொள்ளாத நிலை தான் உடல் பருமன் மற்றும் சீரற்ற உணவு பழக்கவழக்கங்களை பெண்களில் அதிகம் ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். பசிக்கிறது அதனால் உண்டோம் என்றில்லாமல் முதிய வயதில் நாம் உட்கொள்ளும் கலோரி அளவை குறைத்து கொள்வதும், பசியோடு இருக்கும்போது உணவை உண்பதில் நம்மில் ஏற்படும் தூண்டுதலை உணர்ந்து செயல்படுவதும் நமது நாளைய உடல்நலத்திற்கு நன்மை பயக்கும்.