Thursday, October 27, 2016

நீங்கா நினைவுகள்......




மனதில் நிலைத்திருக்கும் இனிய நினைவுகள்
கண்விழித்ததும் அம்மாவைத் தேடும் மழலை வயது நாட்கள்.........
காசு கேட்டு அம்மாவின் புடவையைத் தொங்கிய நாட்கள்..........
கிடைக்கும் சில்லரை காசுக்காக ஒரு மைல் தூரமாயினும் கடைக்கு சென்ற நாட்கள்.......
திண்பண்டங்களை சகோதர சகோதரியிடமிருந்து பதிக்கிய பின் பறித்து திண்ற நாட்கள்....
அர்த்தம் புரியாமல் வெறும் இசைக்காக பாடல்களை முனுமுனுத்த நாட்கள்.....
எச்சில் தொட்டு ஏடு அழிக்கும் சிக்கனம் பழகிய நாட்கள்.......
முடிக்காத வீட்டுப்பாடத்தை நண்பர்களிடமிருந்து copy paste செய்த நாட்கள்........
படித்தே இருந்தாலும் படிக்கவில்லை என்று நண்பனிடம் பொய் சொன்ன நாட்கள்........
பத்துநாள் கழித்து வரும் பண்டிகை விடுமுறையை ஆவலுடன் எதிர்த்த பார்த்த நாட்கள்.......
அடித்த மணியோசை அடங்கும் முன் வீட்டில் காலடி பதித்த விளையாட்டுப் பருவ நாட்கள்....
விடுமுறை நாட்களில் விடியும் முன் விழித்த நாட்கள்..
பயந்து வாழ்ந்த பள்ளி நாட்கள்.....
பெற்றோரை பயக்க வைத்த பருவ நாட்கள்...
வெட்டியாய் திறிந்த விலைமதிப்பில்லா நாட்கள்....
சுட்டியாய் திறிந்த சுதந்திர நாட்கள்....
எத்தனையோ நாட்கள் போனாலும் 
இப்படி நிகழ்ந்த இனிய நாட்கள் .....
இதயத்தை விட்டு நீங்காமல் இருப்பது,  ஏனோ.....

Wednesday, October 26, 2016

என்றுமே அழகு...




தெரியாதக் காற்றும்...
புரியாதக் கவிதையும்...
சொல்லாதக் காதலும்...
கலையாதக் கனவும்...
என்றுமே அழகு தான்...!

Monday, October 24, 2016

உணர்வு

நாம் வாழும் வரை
நம்மை யாரும் வெறுக்க கூடாது!

நாம் வாழ்ந்து முடிந்த பின்பு
நம்மை யாரும் மறக்க கூடாது!!

நிம்மதி

உலகில்
நிம்மதியாக
வாழ ஒரே வழி!

யாரையும்
நேசிக்காமல்
இருப்பது தான்!!

அன்பு

அன்பு
கிடைத்தவர்களுக்கு
தெரியாது!

கிடைக்காதவர்களுக்கு
புரியாது!

தொலைத்தவர்களுக்குத்தான்
தெரியும்
அதன் அருமை!

இழப்பு

இழக்க
விரும்பாவிட்டாலும்!

இழந்து தான்
ஆக வேண்டி
இருக்கிறது சிலவற்றை
வாழ்வில்!!

அன்பு


தகுதி அற்றவர்களிடம்
நீ வைக்கும் அன்பு

தயக்கம் இன்றி
உன்னை தவிக்க விட்டு
செல்லும்!

புரிதல்


புரிந்து கொண்டால்
கோபம் கூட அர்த்தம்
உள்ளதாய் தெரியும்!

புரியவில்லை என்றால்
அன்பு கூட அர்த்தம்
அற்றதாய் தெரியும்!

பாசம்


அளவுக்கு அதிகமாக
ஒருவர் மேல்
பாசம் வைக்கும்
முன் தெரிந்துகொள்...

உனக்கு
அந்த உறவு,
நிரந்தரமானது அல்ல...

உன்னை விட்டு
ஒருநாள் பிரியுமென்று...

சில மனிதர்கள்


சில நேரங்களில் சில மனிதர்கள்
ஏன் வாழ்கிறோம் என
புரிய வைக்கின்றனர்!

சில நேரங்களில் சில மனிதர்கள்
இன்னும் ஏன் வாழ்கிறோம் என
நினைக்க வைக்கின்றனர்!!

கவலை


உனக்காக யாரும்
இல்லை
என்ற கவலை
வேண்டாம்!

உனக்காக
அழுவதற்கு
உன் கண்கள்
இருக்கிறது!!

துடைப்பதற்கு
உன் கைகள்
இருக்கிறது!!!

எச்சரிக்கை


அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே
அடிமை ஆக்கி விடுவார்கள்!

அதிகம் பொறுமையுடன் நடக்காதே
பைத்தியம் ஆக்கி விடுவார்கள்!!

எல்லாம் வெளிப்படையாக இருந்துவிடாதே
வெறுமை ஆக்கி விடுவார்கள்!!!

எல்லாரையும் நம்பி விடாதே
ஏமாளி ஆக்கி விடுவார்கள்!!!!

கோபப்படாமல் இருந்து விடாதே
கோமாளி ஆக்கி விடுவார்கள்!!!!!

வலிகள்

வலிகள்

அதிகமான அன்பு
அதிகமான நம்பிக்கை
அதிகமான ஆசை
இருக்க கூடாது!

மீறினால் வலிதான்!!

பாசம்

பாசம்

சில சமயங்களில் அன்பானவர்களிடம்
அதிகம் கோபத்தை காட்டி விடுகிறோம்!

எப்படியும் நம்மை மன்னித்து விடுவார்கள்
என்ற குருட்டு நம்பிக்கையில்!!

வெற்றிடம்

வெற்றிடம்


நாம்
இல்லாவிட்டால்
யாரும்
வருந்துவதில்லை!

நம் இடத்திற்கு
வேறு ஒருவரை
தேர்ந்தெடுக்கிறார்கள்!!

போரட்டம் தொடரும்...

போரட்டம் தொடரும்...


தேவைப்படும் போது பழகுவதும்
தேவை இல்லாதபோது எடுத்தெரிவதும்
இருக்கும் வரை!

மனித உறவுகளுக்குள்
ஏமாற்றங்களும்
மன போராட்டங்களும்
தொடரத்தான் செய்யும்!!

வலிகள் நிறைந்தது வாழ்க்கை

வலிகள் நிறைந்தது வாழ்க்கை


ஒருவரை இழக்கும் போது
வரும் கண்ணீரை விட,

அவர்களை இழக்க கூடாது
என்று நினைக்கும் போது

வரும் கண்ணீருக்கு தான்
வலி அதிகம்!!

அனாதையாக வாழ்வது மேல்

 அனாதையாக வாழ்வது மேல்....


தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள்..
சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்..
பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தங்கள்..

இவர்களுடன் இருப்பதை விட, அனாதையாக வாழ்வது மேல்...

வாழ்க்கை


வாழ்க்கை

வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே!
சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே வாழ்க்கைக்கு நல்லது!!