Thursday, October 27, 2016

நீங்கா நினைவுகள்......




மனதில் நிலைத்திருக்கும் இனிய நினைவுகள்
கண்விழித்ததும் அம்மாவைத் தேடும் மழலை வயது நாட்கள்.........
காசு கேட்டு அம்மாவின் புடவையைத் தொங்கிய நாட்கள்..........
கிடைக்கும் சில்லரை காசுக்காக ஒரு மைல் தூரமாயினும் கடைக்கு சென்ற நாட்கள்.......
திண்பண்டங்களை சகோதர சகோதரியிடமிருந்து பதிக்கிய பின் பறித்து திண்ற நாட்கள்....
அர்த்தம் புரியாமல் வெறும் இசைக்காக பாடல்களை முனுமுனுத்த நாட்கள்.....
எச்சில் தொட்டு ஏடு அழிக்கும் சிக்கனம் பழகிய நாட்கள்.......
முடிக்காத வீட்டுப்பாடத்தை நண்பர்களிடமிருந்து copy paste செய்த நாட்கள்........
படித்தே இருந்தாலும் படிக்கவில்லை என்று நண்பனிடம் பொய் சொன்ன நாட்கள்........
பத்துநாள் கழித்து வரும் பண்டிகை விடுமுறையை ஆவலுடன் எதிர்த்த பார்த்த நாட்கள்.......
அடித்த மணியோசை அடங்கும் முன் வீட்டில் காலடி பதித்த விளையாட்டுப் பருவ நாட்கள்....
விடுமுறை நாட்களில் விடியும் முன் விழித்த நாட்கள்..
பயந்து வாழ்ந்த பள்ளி நாட்கள்.....
பெற்றோரை பயக்க வைத்த பருவ நாட்கள்...
வெட்டியாய் திறிந்த விலைமதிப்பில்லா நாட்கள்....
சுட்டியாய் திறிந்த சுதந்திர நாட்கள்....
எத்தனையோ நாட்கள் போனாலும் 
இப்படி நிகழ்ந்த இனிய நாட்கள் .....
இதயத்தை விட்டு நீங்காமல் இருப்பது,  ஏனோ.....

Wednesday, October 26, 2016

என்றுமே அழகு...




தெரியாதக் காற்றும்...
புரியாதக் கவிதையும்...
சொல்லாதக் காதலும்...
கலையாதக் கனவும்...
என்றுமே அழகு தான்...!

Monday, October 24, 2016

உணர்வு

நாம் வாழும் வரை
நம்மை யாரும் வெறுக்க கூடாது!

நாம் வாழ்ந்து முடிந்த பின்பு
நம்மை யாரும் மறக்க கூடாது!!

நிம்மதி

உலகில்
நிம்மதியாக
வாழ ஒரே வழி!

யாரையும்
நேசிக்காமல்
இருப்பது தான்!!

அன்பு

அன்பு
கிடைத்தவர்களுக்கு
தெரியாது!

கிடைக்காதவர்களுக்கு
புரியாது!

தொலைத்தவர்களுக்குத்தான்
தெரியும்
அதன் அருமை!

இழப்பு

இழக்க
விரும்பாவிட்டாலும்!

இழந்து தான்
ஆக வேண்டி
இருக்கிறது சிலவற்றை
வாழ்வில்!!

அன்பு


தகுதி அற்றவர்களிடம்
நீ வைக்கும் அன்பு

தயக்கம் இன்றி
உன்னை தவிக்க விட்டு
செல்லும்!

புரிதல்


புரிந்து கொண்டால்
கோபம் கூட அர்த்தம்
உள்ளதாய் தெரியும்!

புரியவில்லை என்றால்
அன்பு கூட அர்த்தம்
அற்றதாய் தெரியும்!

பாசம்


அளவுக்கு அதிகமாக
ஒருவர் மேல்
பாசம் வைக்கும்
முன் தெரிந்துகொள்...

உனக்கு
அந்த உறவு,
நிரந்தரமானது அல்ல...

உன்னை விட்டு
ஒருநாள் பிரியுமென்று...

சில மனிதர்கள்


சில நேரங்களில் சில மனிதர்கள்
ஏன் வாழ்கிறோம் என
புரிய வைக்கின்றனர்!

சில நேரங்களில் சில மனிதர்கள்
இன்னும் ஏன் வாழ்கிறோம் என
நினைக்க வைக்கின்றனர்!!

கவலை


உனக்காக யாரும்
இல்லை
என்ற கவலை
வேண்டாம்!

உனக்காக
அழுவதற்கு
உன் கண்கள்
இருக்கிறது!!

துடைப்பதற்கு
உன் கைகள்
இருக்கிறது!!!

எச்சரிக்கை


அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே
அடிமை ஆக்கி விடுவார்கள்!

அதிகம் பொறுமையுடன் நடக்காதே
பைத்தியம் ஆக்கி விடுவார்கள்!!

எல்லாம் வெளிப்படையாக இருந்துவிடாதே
வெறுமை ஆக்கி விடுவார்கள்!!!

எல்லாரையும் நம்பி விடாதே
ஏமாளி ஆக்கி விடுவார்கள்!!!!

கோபப்படாமல் இருந்து விடாதே
கோமாளி ஆக்கி விடுவார்கள்!!!!!

வலிகள்

வலிகள்

அதிகமான அன்பு
அதிகமான நம்பிக்கை
அதிகமான ஆசை
இருக்க கூடாது!

மீறினால் வலிதான்!!

பாசம்

பாசம்

சில சமயங்களில் அன்பானவர்களிடம்
அதிகம் கோபத்தை காட்டி விடுகிறோம்!

எப்படியும் நம்மை மன்னித்து விடுவார்கள்
என்ற குருட்டு நம்பிக்கையில்!!

வெற்றிடம்

வெற்றிடம்


நாம்
இல்லாவிட்டால்
யாரும்
வருந்துவதில்லை!

நம் இடத்திற்கு
வேறு ஒருவரை
தேர்ந்தெடுக்கிறார்கள்!!

போரட்டம் தொடரும்...

போரட்டம் தொடரும்...


தேவைப்படும் போது பழகுவதும்
தேவை இல்லாதபோது எடுத்தெரிவதும்
இருக்கும் வரை!

மனித உறவுகளுக்குள்
ஏமாற்றங்களும்
மன போராட்டங்களும்
தொடரத்தான் செய்யும்!!

வலிகள் நிறைந்தது வாழ்க்கை

வலிகள் நிறைந்தது வாழ்க்கை


ஒருவரை இழக்கும் போது
வரும் கண்ணீரை விட,

அவர்களை இழக்க கூடாது
என்று நினைக்கும் போது

வரும் கண்ணீருக்கு தான்
வலி அதிகம்!!

அனாதையாக வாழ்வது மேல்

 அனாதையாக வாழ்வது மேல்....


தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள்..
சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்..
பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தங்கள்..

இவர்களுடன் இருப்பதை விட, அனாதையாக வாழ்வது மேல்...

வாழ்க்கை


வாழ்க்கை

வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே!
சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே வாழ்க்கைக்கு நல்லது!!

Saturday, August 27, 2016

மரம் வளர்த்தால் பணம் வளருமா?

மரம் வளர்த்தால் பணம் வளருமா?

மரம் வளர்ப்பது என்பதை கேட்டவுடன் ஏதோ ஓசோன் படலம் ஓட்டை  விழாமல் தடுக்கவும், மாதம் மும்மாரி  பொழியவும்  இவர்களை   எல்லோரும் மரம் வளர்க்க சொல்வதாக நம்  மக்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.மரம் வளர்ப்பில் இருக்கும் உண்மையான லாபத்தை பற்றி தெரிந்தால்  தரிசு நிலங்களை நம் நாட்டில் பார்ப்பது என்பதே அரிது ஆகிவடும்.

இதை பற்றி பெரிதாக தெரிந்துகொள்ள ஒன்றும் இல்லை.உதாரணமாக ஒருவர் 5 ஏக்கர் நிலம் வைத்து இருக்கிறார் என்று வைத்து கொள்ளுங்கள்.சுத்தமாக தண்ணீர் கிடையாது வானம் பார்த்த பூமி, முழுவதும் மழையை நம்பி தான் விவசாயம் பார்க்க முடியும்  என்ற நிலையில், அவர் 
ஏக்கருக்கு 400  மரங்கள் விதம சுமார் 2000  பெரு மரம் ( பிய மரம் (அ ) பியன் மரம் ) கன்றுகளை மழை காலத்தில் நட்டு  பராமரித்து வந்தால் ,அவர் அடையும் லாபம் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் பெரும் சம்பளத்துக்கு ஈடானது.

பிய மரம் என்பது வறட்சி நிலங்களுக்கு மிக உகந்தது.கடும் வறட்சியையும்  தாங்ககுடியது. மிக வேகமாக வளர
கூடியது, குறைந்த பட்ச நீர்வளம் இதற்கு போதுமானது,மழையை மட்டுமே நம்பி கூட இதை நட்டு வளர்க்கலாம்.

4  வருடங்கள்  வளந்த ஒரு மரமானது ,மிக குறைந்த பட்சம் ஒரு 1000  ரூபாய்க்கு போனால் கூட 5   
ஏக்கர் மரம் நட்ட ஒருவர் சுமார் 20  லட்சம் ருபாய்  பெற முடியும். மழையை மட்டும் நம்பி இருக்காமல்  மாதம் சுமார் 2000  அல்லது 3000  செலவு செய்து ,காசு கொடுத்து தண்ணீர் வாங்கி ஊற்றினால் கூட நட்டம் ஒன்றும் இல்லை..இது போல சந்தன , அகர் ,மழை வேம்பு போன்ற  மரங்களை ,மண்ணின் தரத்திக்கு  ஏற்ப  பயிர் செய்து ,பலம் பெறலாம்.




எனவே மழை இல்லை, விளைச்சல் இல்லை என்று புலம்பிக்கொண்டு ,தோட்டம் காடு எல்லாம் விற்றுவிட்டு  வேறு தொழில் செய்யலாம் என்று விவசாயிகள் எண்ணாமல் ,இது போல லாபம் தரும் முறைகளை பின்பற்றி  பயன் பெறலாமே..

இனி வரும் காலம் உழவர் காலம் ,நம்மை நம்பியே உலகம்.. 

மரம் வளர்த்தால் பணம் வளரும் !!!!

Wednesday, June 15, 2016

நலமாய் வாழ சில வழிகள்

30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் வளர்ப்பது எப்படி?



“இன்ஸ்டன்ட்” மரம் வளர்ப்பு!

அரசாங்கம் / பொறுப்பில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய வேலையை தனி மனிதர்கள் ஆர்வமாக செய்து வருகிறார்கள்.

என்னதான் தனி மனிதர்கள் தங்களின் கடும் முயற்சியில் சாதிக்க முடிந்தாலும், அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் பெரியளவில் சாதிக்க முடியாது.

லட்சத்தில் / கோடியில் ஒருவர் விதிவிலக்காக இருக்கலாம். இது போல கூறினாலும், புலம்பிக்கொண்டு மட்டும் இருக்காமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் கடமையை / பணியை விருப்பமாக செய்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இவர்கள் தான் நம்மைப் போன்ற புலம்பல் காரர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கிறார்கள்.

இது போல ஒருவர் தான் அர்ஜுனன். இந்த ஃபாஸ்ட் ஃபுட் உலகத்தில் நமக்கு எல்லாமே உடனே நடக்க வேண்டும் என்று விருப்பம். எது செய்தாலும் உடனே விடை தெரிய வேண்டும், யாருக்கும் காத்திருக்க பொறுமையில்லை. காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த விசயத்தையே புறக்கணித்து டாடா சொல்லி விடுகிறார்கள்.

இங்கிலிஷ்க்காரன் படத்தில் சத்யராஜ், “”கர்ப்பமான” பெண்ணையே திருமணம் செய்து கொண்டால் வேலை மிச்சம் பாருங்க” என்று கூறுவாரே! அதே போல் ஆட்கள் பலர் இருக்கிறார்கள்.

இதனாலோ என்னவோ அர்ஜுனன் மரம் வளர்க்க ஆகும் காலத்தை எப்படி குறைத்து பயன் பெறுவது என்று யோசித்து ஒரு எளிமையான முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இப்போ ஃபாஸ்ட்ஃபுட் உலகம். ‘பனை வெச்சவன் பார்த்துட்டு சாவான்’ங்கிற மாதிரி காத்துக்கிட்டு இருக்க முடியாது.

எல்லாமே சீக்கிரமா கிடைக்கணும். மரமா இருந்தாலும் உடனே அனுபவிக்கணும்.

அதனாலதான் மரம் வளர்க்கிற யுக்தியிலும் ஃபாஸ்ட் ஐடியாவை நான் கடைப்பிடிக்கிறேன்னு” சொல்கிறார் செப்பறை வளபூமி பசுமை உலகம் அமைப்பை நடத்தும் அர்ச்சுனன்.
.

மணியாச்சி ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தவர் அர்ஜுனன். பால் குடித்த மகன் மூச்சு திணறி இறந்தபின் வாழ்வின் மீது வெறுப்பு ஏற்பட்டதாம்.

என்ன பாவம் செய்தேனோ? ஒருவேளை மகனோ, நானோ செத்து அடுத்த பிறவியில் பறவையா, விலங்கா பொறந்தா நாம தங்கறதுக்கு இடம் வேணுமே? இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டிடுறாங்களேன்னு கவலை வந்ததாம். அப்போ தோன்றியதுதான் மரம் வளர்ப்பு.

ஆனால், மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.

.




90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
.

90 நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

# பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

# ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

# கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

# நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

# வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
.

ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி என்கிறார் அர்ச்சுனன்.

மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன். அவரை தொடர்புகொள்ள (9791426281, 9790395796, 9500378441, 9500378449)
.

அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.

ம்ம்… யாருக்கும் இந்த அருமை புரியலை,” என்று அங்கலாய்த்துக் கொள்கிறார் ஃபாஸ்ட் ட்ரீ அர்ச்சுனன்.

அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று, மனம் கணக்குப் போட ஆரம்பித்து விட்டது . ரொம்ப அருமையான அதே சமயம் நடைமுறையில் சாத்தியமான ஒரு செயல்.

இதற்கு அர்ஜுனன் கூறியது போல அரசாங்கம் ஒத்துழைப்பு இல்லை என்றால், ஒரு வெங்காயச் செடி கூட நட முடியாது.
.

ஏங்க எல்லோரும் இப்படி மரத்தோட அருமை தெரியாம / புரியாம இருக்காங்க!! செம மன உளைச்சலாக இருக்கிறது. “ஜெ” கடந்த ஆட்சியில் ஒரு சிறப்பான அறிவிப்பு செய்தாங்க. அது, கண்டிப்பாக அனைவரும் “மழை நீர் சேகரிப்பு திட்டம்” செயல்படுத்த வேண்டும் என்று.

இதனால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் தாறுமாறாக உயர்ந்தது. நம்ம ஊர்ல தான் இது போல நல்லது செஞ்சா பிடிக்காதே! வழக்கம் போல இதற்கும் எதிர்ப்பு. ஓட்டு போய்டுமே என்ற பயத்தில் தேர்தல் சமயத்தில் இந்த உத்தரவை “ஜெ” வாபஸ் செய்தார்.

உருப்படியா இருந்த ஒரு உத்தரவும் டமால் ஆகி விட்டது.

இது போன்ற “மழை நீர் சேகரிப்பு” திட்டத்திற்கு தான் கிறுக்கனுக எதிர்ப்பு தெரிவிப்பாங்க ஆனால், இது போல நெடுஞ்சாலையில் மரம் வைக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.

“ஜெ” மட்டும், நெடுஞ்சாலை முழுக்க மரம் வைத்தே ஆக வேண்டும் என்று ஒரு அதிரடி உத்தரவைப் போட்டால், பொறுப்பில் உள்ளவர்கள் அலறி அடிச்சுட்டு செய்ய மாட்டார்களா!

மரம் பட்டுப் போனால் பொறுப்பில் உள்ளவர்களுக்கு வேட்டு என்று கூடுதலா ஒரு அறிவிப்பையும் வெளியிட்டால், அவனவன் ஒழுங்கா வேலையைப் பார்க்க மாட்டானா!!

இப்படி எல்லாம் நடந்தால் நல்லா இருக்குமே என்று கற்பனையில் மட்டுமே நினைத்து சந்தோசப்பட முடிகிறது. என்னமோ போங்க!

எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான். பொறுப்பில் உள்ளவர்களுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்பதில் மட்டுமே முழுக் கவனமும் உள்ளது.

மக்களைப் பற்றி / வருங்காலத்தில் [வருங்காலம் எங்கே..! இப்பவே அப்படித்தான் இருக்கு] நாம் அனைவரும் எதிர்கொள்ளப் போகும் பிரச்னை பற்றி யாருக்கும் கவலையில்லை.

அடுத்த தலைமுறை நபர்கள் எல்லோரும் மரத்தைப் பார்த்தால்.. “அதோ பாருங்க! அங்கே ஒரு மரம்!” என்று கூற வேண்டிய நிலையில் தான் இருப்பார்கள்.

என்னுடைய ஆதங்கம் எல்லாம், அனைத்து வசதிகளும் / வளங்களும் இருந்தும் பொறுப்பில் உள்ளவர்கள் அக்கறையின்மையால் / திறமையின்மையால் / புறக்கணிப்பால் இப்படி தமிழகம் படாதபாடு படுகிறதே என்பது தான்!

எனவே இதைப் படிக்கும் உங்களை நான் கேட்டுக்கொள்வது, அரசியல்வாதிகளை / அதிகாரிகளை திட்டும் முன்பு நாம் நம் அளவில் என்ன செய்தோம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அவர்களை கை காட்டும் வழக்கமான சமாளிப்பு செயலை கை விட்டு, நம்மால் என்ன செய்ய முடியும் என்று முயன்று சிறு முயற்சி எடுத்தால் கூட போதும்.

ஒன்றுமில்லாமல் போவதற்கு சில விஷயங்களாவது நடக்கும். நம்மைப் போலவே நினைக்காமல் அர்ஜுனன் போன்றவர்கள் முயற்சி செய்வதால் தான், இது போன்ற விசயங்களுக்கு சிறு நம்பிக்கை கிடைத்து வருகிறது.

உங்கள் வீட்டில் இடம் இருந்தால், இது போல ஒரு மரமாவது வையுங்கள்.. அட! முடியாத பட்சத்துக்கு ஒரு செடியாவது வைங்க. மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

இது பற்றி தெரியாதவர்கள் இதைப் படிக்க நேர்ந்தால் ஒருத்தராவது முயற்சிக்க மாட்டார்களா! என்ற ஆதங்கத்தில் இதை பகிர்கிறேன்.