Saturday, May 27, 2017

சட்டை பட்டன் ஏன் பெண்களுக்கு இடதுபக்கமும் ஆண்களுக்கு வலதுபக்கமும் இருக்கு?... தெரியுமா உங்களுக்கு....


அப்படி ஒரு விஷயம் தான் நாம் தினமும் அணிகிற சட்டையில் உள்ள பட்டன். அதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா என்று தெரியாது. நாம் தினமும் அணியும் சட்டையில் ஆண்கள் அணியும் சட்டையில் உள்ள பட்டன் வலதுபுறமாகவும் பெண்கள் அணியும் சட்டையில் உள்ள பட்டன்கள் இடதுபுறமாகவும் வைத்துத் தைக்கப்பட்டிருக்கும்.


அதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? இப்பவாச்சும் தெரிஞ்சிக்கோங்க...

விக்டோரியா மகாராணி காலத்திலேயே ஆண், பெண் இருவருமே சட்டை அணிந்து கொள்ளும் பழக்கம் இருந்தது. குறிப்பாக, பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் பட்டன் வைத்த சட்டையை அதிகம் அணிந்தனர்.

ஆரம்ப காலத்தில் அவர்கள் அணியும் சட்டையில் பின்புறத்தில் தான் பெரிதும் பட்டன் வைத்துத் தைக்கப்பட்டது. அவர்களுடைய வீடுகளில் உள்ள பணிப்பெண்கள் தான் அவர்களுக்கு பட்டன் போட்டுவிடுவார்கள்.

அவ்வாறு பட்டன் போட்டுவிடும்போது, பெண்களுக்கு வலதுபக்கம் கையிலிருந்து இடப்பக்க பட்டன் ஓட்டையில் மாட்டிவிடுவார்கள். இந்தமுறையே பட்டன் போடுவதற்கு மிக சுலபமாக இருந்ததால் அதுவே தொடர்ந்து பழக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

ஆண்களுடைய சட்டையைப் பெரும்பாலும் அவர்களே அணிந்து கொள்வதால் அவர்களுக்கு வலது புறத்தில் பட்டன் வைத்துத் தைக்கப்பட்டது. 

Friday, May 26, 2017

வாழ்வில் முன்னேற.

நீ வாழ்வில் முன்னேற
வேண்டுமெனில் உன்னுடைய
கால்களால் நடந்து போ
மற்றவா்களின்  முதுகில் ஏறி போகாதே .

பாலம்

ஆற்றின் குறுக்கே பாலம் கட்டாத காலத்தில், தண்ணீர் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.

    பாலம் கட்டிய பிறகு வாகனங்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது..! 

வாழ்த்துக்கவிதை

வாழ்க வையகம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்!

வாழ்த்துக்கள்
வாழ்க்கையின்
ஜீவநாடிகள்!
வாழ்த்துவோரும்
வாழ்த்தப்படுவோரும்!
நன்மை கொள்வதென்னவோ!
கோடி!
வாழ்த்தின் மேன்மை அறிந்து!
இயற்கையைப் போற்றுவோம்!
தாய்தந்தை போற்று வோம்!
நம்மை நாமே!
வாழ்த்திக்கொள்வோம்!
நம் எண்ணங்கள்
ஏகாந்தம் பெற!
இன்னலில்லா!
வாழ்வுதனை
பெற்று இன்பம்
சேர்த்து!
ஈகை பாராட்டி!
போற்றுதலோடு
வாழ்த்துப் பெற்று!
அகம் மகிழ்ந்து!
ஆனந்தம் பாடி!
இன்பத்தோடு
ஈகை உள்ளத்தோடு!
ஊன்றுகோலாய்
எவ்வேலையிலும்!
ஏற்றம் கண்டு!
ஐயம் தெளிந்து!
ஒலிஒளியாய்!
ஓதுதலில் வெற்றிக்கொண்டு!
ஔதடமே! இல்லா
அஃதொரு
வாழும் பாதை
அமைத்து!
வாழ்த்துக்கள் பலவற்றோடு!
குருநெறியில்
வாழ்ந்திட!
வாழ்வின் நோக்கம்!
விளங்கிடுமே!