Friday, January 22, 2021



இயற்கையை நாம் அழிக்க
நினைத்தால் இயற்கை
நம்மை அழித்து
விடும்.


 மனதில் பல துன்பங்கள்

இருந்தாலும் இனிய
சாரலோடு மழையில்
நனையும் போது
துன்பங்கள் கூட
சந்தோசமாக
மாறி விடுகிறது..

பொழியும் மழைத்
துளிகளுக்கு தெரிவதில்லை
பல உயிர்களின் தாகத்தை
தீர்க்கத் தான் சென்று கொண்டு
இருக்கிறோம் என்று..

தங்கள் வீடுகளை இழந்து
அகதிகளாக அலையும்..
பறவைகளுக்கு தான்
புரியும் மரங்களின் அருமை.

தினமும் இரவு வந்தால்
கருப்பு நிற உடையை
அணிந்து கொள்கிறது பகல்.

சில நொடிப் பொழுது
வாழ்ந்தாலும் தானும்
குதூகலமாகவும் தன்னை
ரசிப்பவர்களையும்
பரவசமாக்கும் பனித்துளி.

மரத்தடியில் உதிர்ந்து
கிடக்கும் மலர்கள்..!
தன்னை வளர்த்து விட்ட
வேர்களை மரம் பூப்போட்டு
வணங்குகிறதா..?

கடல் அலைகளுக்கு
எவ்வளவு அன்பு கரைகள்
மீது ஒவ்வொரு முறையும்
முத்தமிட்டு தன் அன்பை
வெளிப்படுத்துகின்றன.

இந்த உலகில் யாரும்
அனாதை அல்ல
இனிமையை தர காற்றும்
வழிகாட்ட வானமும்
இருக்கும் வரை.

இயற்கை செழிக்க
வைத்தால் இயற்கை
நம்மை செழிக்க வைக்கும்.
இயற்கையை நாம் அழிக்க
நினைத்தால் இயற்கை
நம்மை அழித்து விடும்.