Monday, December 10, 2012

வாழை இலை







தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெறுகின்றோம் என்று நம் எல்லோருக்கும் தெரியும் . நாம் இப்போது வாழை இலையின் மகத்துவம் , அதன் பயன்பாடுகள் என்னென்ன என்று பார்ப்போம் . நிறைய பயன்பாடுகள் உண்டு . நாம் இந்த வாழை இலையில் இருந்து பல தேவைகளை பூர்த்தி செய்கின்றோம் .
நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .
வாழை இலை என்று சொன்னாலே நமக்கெல்லாம் ஞாபகத்தில வருவது சாப்பாடு. இதனை நாம் பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் . வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள் .
மேலும்


1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
:-
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள்வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
:-
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
:-
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
:-
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
:-
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
:-
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்டஇடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
:-
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் அதுவும் எங்க கொங்கு மண்ணில் தலை வாழை இலையுடன் தான் விருந்தே நடக்கும். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும்.
:-
நான் வார இறுதிநாட்களில் எங்க ஊரில் தான் இருப்பேன். ஊரில் இருக்கும் நாட்களில் மதிய உணவு நிச்சயம் தலை வாழை இலையில் தான் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. 
:-
இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம்.
:-
இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
:-
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
:-
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

Monday, October 8, 2012

மாமரத்தின் பயன்கள்


 மாமரம்









மாமரத்தின் பூர்வீகம் இந்தியா . குறிப்பாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் அதிக மாமரம் உள்ள மாவட்டமாகும். மாமரம் 35 - 40 மீ உயரம் வளரக்கூடிய பெரிய மரமாகும். இதன்
 இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன. கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன. பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. மிதமான இனிய மணத்தையும் கொண்டுள்ளன.

மாமரம் வளர்ப்பது எளிது; மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரகங்கள் வெவ்வேறு குணங்களுடன் கிடைக்கின்றன. உலகிலேயே, அதிகம் அப்படியே உண்ணப்படும் பழம் என்ற சிறப்பு மாம்பழத்தையே சாரும். 

இந்திய மாம்பழ வகைகள் பெரும்பாலும் ஒட்டு மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. வேகமாக வளரக்கூடிய இரகத்தை சேர்ந்த ஒரு வருட மாங்கன்றின் மேல் விருப்பப்படும் இரகத்தினை ஒட்டுவது பொதுவான முறையாகும். சிலநேரம், மண்ணுக்கேற்ப உகந்த இரகங்களின் மேல் சிறந்த குணமுடைய மா இரகங்கள் ஒட்டப் படுகின்றன. இந்தியசீன வகை இரகங்கள் சில விதையிலிருந்தும் வளர்க்கப்படுகின்றன. 

முதல் சில ஆண்டுகள் அடிப்பாகத்தில் 3 அடி உயரம் வரை கிளைகள் வளராமல் கழித்து விடுவது நல்லது. அதன் பிறகு மாமரங்கள் தாமாகவே விரும்பத்தகுந்த நிலைக்கு வளரும்.

இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.

மாந்தளிர்

நீரிழிவு உள்ளவர்கள், மாவின் கொழுந்து இலையை உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும். மாவிலைச் சாறுடன் தேன், பால் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து அருந்தினால் ரத்தத்துடன் பேதியாவது நிற்கும். மாவிலையை மென்றுவந்தால் ஈறுகள் பலமாகும். மாவிலையின் நடுநரம்பை மைபோல் அரைத்து இமை மேல் வரும் பருக்கள் மீது தடவினால் அவை குணமாகும்.

மாம்பூ

உலர்ந்த பூக்களில் டானின் என்கிற சத்து உள்ளது. மாம்பூவைக் குடிநீரில் இட்டுக் குடித்தால் வயிற்றுப்போக்கு, சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள் ஆகியன குணமாகும். மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து தூளாக்கி அதனுடன் நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் போதும்.

மாம்பிஞ்சு

இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.

மாங்காய்

பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவையும் ரத்த சோகையையும் நீக்கும் திறன் கொண்டது. பாத வெடிப்புகளுக்கு மாங்காயின் சாற்றைப் பூசினால் குணமாகும். காயின் தோலைக் கையளவு எடுத்து நெய்விட்டு வதக்கி, சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும். காயின் தோலை அரைத்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் ரத்த மூலமும் வயிற்றுப்போக்கும் தீரும்.

மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது. அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும்.

காம்பு

காம்பில் இருந்து வெளிப்படும் பால், படர்தாமரை மற்றும் சொறி சிரங்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.

மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் 'ஏ’ சத்து அதிக அளவில் உள்ளது. மாம்பழம் மலச்சிக்கலைப் போக்கும். ரத்தத்தை விருத்தி செய்து கண் பார்வையைத் தெளிவாக்கும். விந்தணுக்களை அதிகப்படுத்தி, உடலை அழகுடன் திகழச் செய்யும்.
பருப்பு, கசகசா, சுக்கு, ஓமம் இவற்றுடன் பழச்சாறு விட்டு அரைத்து, நெய் சேர்த்துக் கொடுத்தால் கடுமையான வயிற்றுப்போக்கும் குணமாகும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.
இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம்.

மாங்கொட்டை

பருப்பைப் பொன்னிறமாக வறுத்துத் தூளாக்கி உண்டால் வயிற்றுப்போக்கு, வெள்ளைப்படுதல், அதிகமான ரத்தப்பெருக்கு ஆகியன கட்டுப்படும். பருப்புப் பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து நீருடன் இரவில் உண்டு வந்தால் குடலில் உள்ள புழுக்கள் நீங்கும். வெட்டுக்காயம், தீக்காயம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பருப்பை அரைத்துப் பூசலாம். மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.

மாம்பிசின்

கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.

மா மரப்பட்டை

இதனுடன் கோரைக்கிழங்கு சேர்த்து அவித்துப் பிழிந்து அதிவிடயம் மற்றும் இலவங்கப் பிசின் சேர்த்துக் குடித்தால் வயிற்றுப்போக்குடன் கூடிய காய்ச்சல் நீங்கும். மாம்பட்டையை நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சிய எண்ணெயைப் பயன்படுத்தித் தலைக்குக் குளித்தால் மேக வியாதி, வெள்ளைப்படுதல், விஷக்கடியால் ஏற்படும் வலி ஆகியன குணமாகும். மரப்பட்டையை ஊறவைத்த குடிநீரைக் கொப்பளிக்கப் பல்வலி நீங்கும்.

இலையிலிருந்து வேர் வரை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் மாமரத்தை வீட்டிற்கு ஒரு மரமாவது நட்டு வளர்ப்போம், ஆரோக்கியம் பெறுவோம். அருஞ்சுவையான மாம்பழங்களை சுவைத்து மகிழ்வோம்
.


Sunday, October 7, 2012

பலன் தரும் பசுமைக் கூடாரம்!


வேளாண்மைத் தொழில்நுட்பத்தில் 200 ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும், இந்தியாவில் புதிய தொழில்நுட்பமாக உள்ள பசுமைக் கூடாரத்தில் பயிர் சாகுபடி முறை மிகவும் பலன் தரும் வழிமுறையாக உள்ளது.
நமது நாட்டில் 95 சத பயிர்கள் வயல் வெளிகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சில வகைப் பயிர்களை எல்லாவித தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளர்க்க இயலாது. இந்தப் பயிர்களுக்கு ஏற்ற சூழல்நிலையை உருவாக்கினால் மட்டுமே எந்த இடங்களிலும் இந்தப் பயிர்களை வளர்க்க முடியும்.

பசுமைக் கூடாரம்: 

பசுமைக் கூடார தொழில்நுட்பம் என்பது பயிர்களுக்கு சாதகமான சுற்றுப்புறச் சூழலை வழங்குவதேயாகும். காற்று, குளிர், மழை அதிகப்படியான சூரிய ஒளி, அதிக வெப்பநிலை, பூச்சி நோய்களிலிருந்து செடிகளைப் பாதுகாக்க இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக உள்ளது.
பசுமைக் கூடாரம் என்பது ஒளி ஊடுருவக்கூடிய அல்லது பிளாஸ்டிக் கூரையினால் போர்த்தப்பட்ட அமைப்பாகும். இந்தக் கூடாராத்தினுள் பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்குத் தேவையான தட்ப வெப்பநிலை எளிதில் கிடைக்கும். கரியமிலவாயு உள்புறத்திலேயே தங்கி விடுவதால் தாவரத்தின் ஒளிச் சேர்க்கைக்கு அதிகப்படியான கரியமில வாயு கிடைக்கிறது. இதன் மூலம் பயிர்களில் 5 முதல் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது.
இதன் காரணமாக விளைச்சல் அதிகமாகவும், தரமான விளைபொருள்களும் கிடைக்கின்றன. மேலும், மண்ணிலிருந்து ஆவியாகும் நீரும் உள்புறத்திலேயே தங்கிவிடுவதால் ஈரப்பதமும் அதிகமாகிறது. குறைந்த நீர்ப்பாசனமே தேவைப்படும்.

பயன்கள்-நன்மைகள்:

 பூச்சி, நோய், எலிகள் மற்றும் பறவைகள் பயிரைத் தாக்குவதிலிருந்து
பாதுகாக்கலாம். அதிகமான வெப்பம், பெரும் மழை, அதிவேகக் காற்றுகளால் பயிருக்குச் சேதம் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. பூச்சிக் கொல்லிகள், பூசணக் கொல்லிகள், உரங்கள் ஆகியவை சரியான அளவில் உபயோகிக்கலாம். ஆண்டு முழுவதும் எந்தப் பயிரையும் உற்பத்தி செய்யலாம்.
சந்தையில் பருவமில்லா காலத்தில் வரும் விளைபொருள்களுக்கு அதிக வரவேற்பும், அதிக விலையும் கிடைக்கும். எனவே, அத்தகைய தருணங்களில் பசுமைக் கூடார உற்பத்தி முறை பெரிதும் உதவியாக இருக்கும். காய்கறிகளைப் பதப்படும் தொழில்சாலைகளுக்குத் தேவையான காய்கறிகளை தொடர்ந்து உற்பத்தி செய்து வழங்க முடியும்.
50 நாடுகளில் பயன்: பசுமைக் கூடார அமைப்புகள் இப்போது உலகில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிக ரீதாயாக அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2.8 பில்லியன் டாலர்கள் ஈட்டக் கூடிய மலர் சாகுபடி, 400 ஹெக்டர் பரப்பில் பசுமைக் கூடார முறையில் மேற்கொள்ளப்படுகிறது. ஜப்பானில் 54 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பசுமைக் கூடார உற்பத்தி முறை உள்ளது. இந்தியாவில் 1980-ம் ஆண்டுதான் பசுமைக் கூடாரத் தொழில்நுட்பம் தொடங்கப்பட்டது. முதலில் ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இப்போதுதான் உலகமயமாக்கல், வேளாண் விளைபொருள் ஏற்றுமதியால் பசுமைக் கூடார தொழில்நுட்பத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது.
உள்ளூர் சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி பயிர் வகைகள் பயிரிடும் வகையில் இந்தக் கூடாரங்களை அமைக்க முடியும். 4 வகை பசுமைக் கூடார முறைகள் உள்ளன.
குறு நுட்ப பசுமைக் கூடாரம்: இந்த வகை கூடாரத்தில் காலநிலைக் காரணிகள் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்காது. மூங்கில் கட்டைகள், பாலீத்தின் பைகள் உபயோகப்படுத்தி கட்டப்படும். பூச்சிகளை கட்டுப்படுத்தும் வலைகளையும் பயன்படுத்தலாம். வெயில் காலங்களில் பக்கச் சுவர்களை திறந்து வைப்பதன் மூலம் வெப்ப நிலையைக் குறைக்கலாம். இந்த வகை கூடாரம் குளிர்ப் பிரதேசங்களுக்கு ஏற்றவையாகும்.
மித நுட்ப பசுமைக் கூடாரம்: இயந்திரங்ளைக் கொண்டு இந்த வகை கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. இரும்புக் கம்பிகளைக் கொண்டு அமைக்கப்படுவதால் வேகமாக வீசும் காற்றை எதிர்த்து நிற்கும் தன்மை கொண்டவை. காற்று வெளியேற்றி விசிறிகள், பனிப்புகை குழாய்கள், குளிர்விக்கும் பட்டைகள் ஆகியவற்றை பயன்படுத்தி கூடாரத்தில் தேவையான அளவு வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றை நிலவச் செய்ய முடியும். பயிர் பருவம் முழுவதும் தேவைக்கேற்ப சூழலை மாற்றிக் கொள்ளலாம். தரமான மலர்களை இந்த வகையில் உற்பத்தி செய்ய முடியும். வறண்ட வானிலை உள்ள பகுதிகளில் இந்தக் கூடாரங்கள் உகந்தவையாகும்.
உயர்நுட்ப பசுமைக் கூடாரம்: முழுமையான தானியங்கி காலநிலைக் கட்டுப்பாட்டு இயந்திரங்களைக் கொண்டவை. இந்த வகை கூடாரம் அமைக்க செலவு அதிகமாக இருந்தாலும் தரமான உற்பத்திப் பொருள்களை வழங்குவதால் செலவை ஈடு செய்யலாம். இந்தக் கூடாரத்தில் வெப்பநிலை, ஈரப்பதம், வெளிச்சம் போன்ற காரணிகளின் அளவை ஓர் உணர் கருவியானது உள் வாங்கிக் கொள்ளும். அந்த கருவியில் உள்ளவற்றை சரிபார்த்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
மலைச் சரிவுகளுக்கான கூடாரம்: சமனற்ற கூரைகளைக் கொண்ட பசுமைக் கூடாரங்கள் மலைச் சரிவுகளில் கட்டுப்படும். சரிவுகளுக்குத் தகுந்தபடி வெவ்வேறு அளவுகளில் அமைக்கப்படும். தானியங்கி காலநிலைக் கட்டுப்பாடுகள் பயன்படுத்துவதில்லை. இதேபோல், பிளாஸ்டிக் பசுமைக் கூடாராங்களை குறைந்த செலவில் அமைக்கக் கூடியது. புற ஊதாக்கதிர்கள் கொண்டு மேம்படுத்தப்பட்ட தாள்களால் அமைக்கப்படும் இந்தக் கூடாரங்கள் 4 ஆண்டுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Wednesday, September 12, 2012

முதலாம் ஆண்டு திருமண கொண்டாட்டம்...

முதலாம் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்


அன்பு சொந்தங்களுக்கு வணக்கம் என்னுடைய முதலாம் ஆண்டு திருமண நாளில் என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள் பல கோடி....

என்னுடைய திருமண நாள் கொண்டாட்டமாக என்னாள் முடிந்த உதவியாக என்னுடைய கிராமத்திற்க்கு அருகிலுள்ள இருளர் சமுதாயத்தை சேர்ந்த 160 மாணவர்களுக்கும்,சமுதாயத்தில் பின் தங்கியுள்ள 66 மாணவர்களுக்கும் அவர்களின் படிப்பிற்கு தேவையான உபகரணங்களையும் இனிப்பையும் நானும் எனது மனைவியாரும் பள்ளி
மாணவர்களுக்கு வழங்கினோம்.



அப்போது மாணவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியை பாத்தது மீண்டும் கிடைக்காத ஒரு நிகழ்வு...



பள்ளியை சேர்ந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் எங்களுக்கு பொன்னடை போர்த்தி எங்களை வாழ்த்திய நினைவு எங்களால் மறக்க முடியாத ஒன்று..

என் முதலாம் ஆண்டு திருமணநாள் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு.. இணைய உறவுகளும் இதனை பின்பற்றி மற்றவர்களிடமிருந்து வேறுபடுவோம்..


புகைப்படங்களில் சில...


















Friday, July 6, 2012

புகைப்பிடிப்பவரா நீங்கள்புகைப்பிடிப்பவரா நீங்கள்? இதை படிங்க...இதையும் பாருங்க....? சில எச்சரிக்கை குறிப்புகள்..!!(படங்களுடன்))


புகைப்பிடிப்பவரா நீங்கள்? இதை படிங்க...இதையும் பாருங்க....

நீங்கள் புகைப்பிடிப்பவரா? உடனடியாக புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்..!

புகைப்பிடிப்பதால் ஞாபக சக்தியை இழக்க நேரிடும். நீங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், ஏதோ ஒரு பொழுதுபோக்காக, விளையாட்டாக புகைப்பிடித்தலை ஆரம்பித்திருக்கலாம்.

புகைப்பிடிப்பது உங்களுக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் கொள்ளி..!

மனக் கவலையைப் போக்க.. நண்பர்களின் பிடிவாதத்தால் "ஒன்றே ஒன்று மட்டும்.. எனக்காக ப்ளீஸ்.. " என்று நண்பர்களின் வேண்டுகோளை தட்டமுடியாமல்,

"அப்பா சிகரெட் பிடிக்கிறாரே.. நாமும் பிடித்துப்பார்த்தால் என்ன?" என்று திருட்டு தனமாக.. 

"வாய்வழியாக புகையை இழுத்து மூக்கின் வழியாக எப்படி வருகிறது? நாமும்தான் விட்டுப் பார்ப்போமே?" என்று சிறுபிள்ளைத்தனமாக..

சாம்பலாவது சிகரெட் மட்டுமல்ல.. விரைவில் நீங்களும்தான் !

"நம்முடைய ஹீரோ எவ்வளவு ஸ்டைலாக புகைப்பிடிக்கிறார். அதுபோல நாமும் செய்தாலென்ன என்ன" என்று... 


புகைபிடிப்பது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் அருகில் இருப்பவர்களையும் பாதிப்பை ஏற்படுத்தும்

இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் புகைப்பழக்கத்தை ஆரம்பித்து இருப்பீர்கள்..

தொடர்ந்து அதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அதுவே தொடர் பழக்கமாகியிருக்கும். பிறகு அது ஒரு போதையாகவே மாறிப்போயிருக்கும். சிகரெட் புகையை இழுத்து ஊதித்தள்ளுவதில் ஒரு அலாதி சுகமாக மாறிபோயிருக்கும். எத்தனைப் பேர் சொன்னாலும் இனி மாறப்போவதில்லை என்ற நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டிருப்பீர்கள். 


புகையிலைப் பொருளான சிகரெட்டை ஒதுக்குவோம்.

சிகரெட், பீடி இதுபோன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்த பழகிவிட்ட பிறகு அதை  விடுவது என்பது இயலாததாகியிருக்கும்.

நான் சொல்வது சரியா? ஆனால் நிச்சயம் இந்த பழக்கத்தை விட முடியும். நாம் நினைத்தால் எதுவுமே சாத்தியமே..!

மனது வைக்க வேண்டும்.. அப்போதுதான் இதிலிருந்து விடுபடமுடியும்.


புகைப்பிடிப்பதால் உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் குழந்தைகளையும் அது பாதிக்கும். சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் உங்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டாலே நீங்கள் கிட்டதட்ட சிகரெட்டை நிறுத்திவிட்டீர்கள் என்று அர்த்தம்.

அதற்கு முன்பு இதன் விளைவால் என்னென்ன தீமைகள் என்று நாம் அறிந்துகொண்டாலே கிட்டதட்ட அடுத்த நொடியே இந்த பழகத்தை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்..

இந்தப் படத்தில் பாருங்கள் சிகரெட் பிடிப்பதால் தோல்சுருங்கிய முகம்.


முதலில் இந்த பழக்கதைத் கைவிடுவதால் நம் அறிவுசார்ந்த செயல்பாடுகள் இன்னும் செம்மைப்படும். ஞாபகச் சக்தி அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

புகைப்பிடித்ததின் விளைவு.. தோல் அதன் இயல்புதன்மை மாறியிருக்கிறது

புகைப்பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து இங்கிலாந்தின் நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில்(Northumbria University, England) ஞாபகசக்தி குறித்த ஒரு செயல்முறை தேர்வு நடத்தப்பட்டது. இதில், சராசரியாக இரண்டரை வருடங்களுக்கு முன்பு புகைப்பழகத்தை கைவிட்டவர்கள், புகைப்பவர்களைவிட 25 சதவிகிதம் நன்றாகவும், புகைப்பழக்கமே இல்லாதவர்கள் 37 சதவிகிதம் நன்றாகவும், செயல்பட்டது தெரியவந்தது.


Northumbria University, England

இதற்கு முந்தைய ஆய்வுகளில் புகைப்பழக்கத்தை கைவிடுவதால் 'பின்னோக்கிய ஞாபக சக்தி' மேம்படுகிறது என்று தெரியவந்தது.

பின்னோக்கிய ஞாபக சக்தியா? அப்படின்னா என்ன? என்று கேட்கிறீர்களா?

அதாவது, ஒரு விடயத்தை படித்து பின்னர் தேவைப்படும்போது அதை நினைவுகூரும் திறனைதான் இப்படி சொல்கிறோம்.


புகைப்பிடித்ததின் விளைவு.. நுரையீரல் சிற்றறைகளில் பாதிப்பு..

ஆனால் இந்த புதிய ஆய்வின் நோக்கம் தொலைநோக்கு ஞாபக சக்தி'யை அதாவது (ஒரு குறிப்பிட்ட செயலை ஞாபகம் வைத்துக் கொண்டு எதிர்காலத்தில்ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்தும் திறன்) கணக்கிடுவதாகும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மாத்திரையை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ள தொலைநோக்கு ஞாபக சக்தி அவசியம்.
நீண்க கால புகைப்பழக்கத்தால் மூளையின் சில திசுக்கள் சிதைந்து போவது அல்லது மூளையின் சில பாகங்களில் திசுத்திறன் இழப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. மேலும் ஆய்வாளர்களின் யூகப்படி, புகைப்பபழக்கமானது முளையின் ப்ரீப்ரான்டல் கார்டெக்ஸ், ஹிப்போகேம்ப்பஸ் அல்லது தலாமஸ் ஆகிய பல பகுதிகளை சேதப்படுத்தக்கூடும் என்று தெரிகிறது. இவை அனைத்தும் தொலைநோக்கு ஞாபக சக்தியுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.


நீண்க கால புகைப்பழக்கத்தால் மூளையின் சில திசுக்கள் சிதைந்து போவது அல்லது மூளையின் சில பாகங்களில் திசுத்திறன் இழப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. மேலும் ஆய்வாளர்களின் யூகப்படி, புகைப்பபழக்கமானது முளையின் ப்ரீப்ரான்டல் கார்டெக்ஸ், ஹிப்போகேம்ப்பஸ் அல்லது தலாமஸ் ஆகிய பல பகுதிகளை சேதப்படுத்தக்கூடும் என்று தெரிகிறது. இவை அனைத்தும் தொலைநோக்கு ஞாபக சக்தியுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.



இரத்தத்தில் நிகோடின் படிவுகள்-Nicotine in the blood

இதிலிருந்து, புகைப்பதால் கிக்கு மட்டும் ஏறவில்லை. நமக்குத் தெரியாமலேயே நம்முடைய தொலைநோக்கு ஞாபக சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது என்பது தெளிவாகிறது.

புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள்: 

  • முடி நிறமாற்றம் அடைகிறது.(hair color change)
  • மூளையானது புகைத்தலுக்கு அடிமையாகிறது. எப்போதும் புகைக்கவேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கும் நிலைக்கு மாறுவது.
  • காண்பார்வை குறைபாடுகளை. காட்ராக்ட் (cataracts) போன்றவை..
  • மூக்குக்கூட பாதிப்புத்தான்.. மன நுகர்ச்சித்தன்மை குறைதல்.
  • தோல் சுருங்கிப்போகும்(Wrinkle). இளவயதிலேயே வயதான தோற்றத்தை அடைதல்.
  • பற்களின் நிறமாற்றம், பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி(Gingivitis) போன்றவை.
  • வாய் மற்றும் தொண்டை பாதிப்புகள். உதாரணமாக உதடுகளின் வடு உண்டாவது,  உணவுப் பாதை மற்றும் தொண்டை புற்றுநோய், சுவை நுகர்ச்சி குறைதல், துர்நாற்றம் (கெட்ட வாசனை.)
  • ரத்த ஓட்டம் குறைவதால் கைகால்கள் செயலிழக்கும் தன்மை. இரத்தத்தில் நிகோடின் படிவுகள் சேர்தல்.
  • நுரையீரல் தொற்று நோய்கள், சுவாசப்பை புற்று நோய். நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD), சுவாசப்பைத் தொற்று (Pneumonia) ஆஸ்துமா போன்றவை
  • மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு.(Heart attack)
  • ஈரில் புற்று நோய் வரலாம்.
  • இப்பழக்கம் வயிற்றை விட்டுவைப்பதில். நாளடைவில்  அல்சர், குடல், இரப்பை, சதை புற்றுநோய், நாடி வெடிப்பு (Aneurysm) போன்றவையும் ஏற்படும்.
  • சிறுநீரகப் புற்று நோய்(Kidney cancer), சிறு நீர்ப் பை புற்று நோய்.
  •  எலும்பின் உறுதி குறைந்து வலுவிழத்தல். இதனால் எலும்பு முறிவு(Fracture) ஏற்படும் அபாயம்.
  • இனப்பெருக்கத் தொகுதி பாதிக்கப்படுதல், உதாரணமாக விந்தணுக்களின் வீரியம் குறைதல், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல், குழந்தையின்மை(Childlessness) போன்றவை.
  • இரத்தத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், இரத்தப்புற்று நோய்(Blood Cancer), இதனால் விரைவில் நோய்வாய்ப்படும் தன்மை உண்டாகுதல்.
  • கால்கள் வலுவிழந்து,  உறுதிச் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் காயம் ஏற்படல்.


எனவே புகைப்பதை நிறுத்துவோம். ஞாபகசக்தியை வலுப்படுத்துவோம்.

மேலும் சில படங்கள்..


தோல்பாதிப்பு



இரத்தத்தில் நிகோடின் கலப்பு


புகைப்பிடித்ததால் ஒட்டி, ஒடுங்கிப்போன முகம்



தோல் காயங்கள்



கண்பார்வை கோளாறு


முடிகொட்டுதல்

 விரலிடுக்கில் பாதிப்பு

நிகோடின் கறைபடிந்த பாதிப்புக்குள்ளான பற்கள்

Tuesday, June 12, 2012


பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த சித்திரை கோடை உழவு செய்யவும்...




கார் காலத்தில் பயிர்களைத் தாக்கும் நோய், பூஞ்சாளம், பூச்சிகளுக்கான கருமுட்டைகள் நிலத்தில் தங்கியிருப்பதை அழிப்பதற்கு கோடை உழவு செய்வது சிறந்தது 


 பொதுவாக அனைத்து வகையான பூச்சிகளும் தங்களது இனப் பெருக்கத்துக்கான முட்டைகளை மண்ணிலேயே பாதுகாப்பாக இட்டு வைக்கின்றன. இவை மழை காலத்தில் புழுக்களாக வெளிவந்து பயிர்களை உண்டு வளர்கின்றன. இவற்றை முட்டை நிலையிலேயே அழிப்பதற்கு கோடை காலத்தில் மழை பெய்யும்போது புழுதி உழவு செய்வதே சிறந்த வழியாயாகும்.


 கோடை மழை பெய்யும்போது ஈரத்தைப் பயன்படுத்தி சட்டிக் கலப்பையால் முதல் உழவு செய்யவேண்டும்.


 இதனால் கீழ்மண் மேலாகவும் மேல்மண் கீழாகவும் புறட்டப்படும்.
 இதில் மண்ணில் அடியிலிருக்கும் பூச்சிகளது முட்டைகள், புழுக்கள் அனைத்தும் வெளியேற்றப்படும். மேலும், பயிர்களுக்கு நோய் பரப்பும் பூசணங்கள், பாக்டீரியாக்கள் சூரிய வெப்பத்தால் அழிக்கப்படுகின்றன. இதனால் பயிரிடும் காலத்தில் பயிர்களுக்கு நோய் தாக்குதல் வாய்ப்பு மிகவும் குறையும்.


 மேலும், மண்ணின் இறுகிய தன்மை மாறி இளகிய நிலைக்கு வரும். மழை நீர் நிலத்தினுள் சென்று ஈரரப்பதம் காக்கப்படும். காற்றோட்டமும் ஏற்படும். கோடை உழவு செய்யும்போது நிலத்தின் சரிவுக்கு ஏற்ற வகையில், குறுக்காக உழவு அமைய வேண்டும். அவ்வாறு உழவுசால் அமைக்கும்போது மண்ணின் ஊட்டச்சத்து மிகுந்த மேல் மண் அரிமானம் ஏற்படாமல் தடுக்கலாம். மண்ணிலுள்ள அங்ககச் சத்துகள் வெளிச் செல்லாது.


 முதல் உழவுக்குப் பின்னர் இரண்டாவது உழவை கொத்துக் கலப்பை கொண்டு உழ வேண்டும். இலை தழைகள், சருகுகள் கோடை உழவில் மண்ணுக்குள் புதைவதால் மண்ணில் கரிமச் சத்துக்குகள் அதிகரிக்கும்.
இருபோக சாகுபடிப் பகுதிகளில் இரண்டாவது உழவின்போது சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தால் உரச் செடிகளை விதைக்கலாம். இவை வளர்ந்து நெல் சாகுபடிக்கு முன் நிலத்தில் மடக்கி உழவு செய்தால தழைச்சத்தை அதிகரிக்கலாம்.


 ஒருபோகச் சாகுபடிப் பகுதிகளில் இரண்டாவது உழவின்போது கொலுஞ்சி போன்ற தழைச் சத்துச் செடி விதையை விதைக்கலாம். 

Wednesday, May 16, 2012

வந்து விட்டது கத்தரி வெயில் - தப்பிப்பது எப்படி...


வந்து விட்டது கத்தரி வெயில் -  தப்பிப்பது எப்படி...



                       து கோடை வெயிலின் உக்கிரம் அதிகம் இருக்கும் காலம். கத்திரி வெயிலின் தாக்கம் மனிதர்களை பல அவஸ்தைகளுக்கு உள்ளாக்குகிறது.

கத்திரி வெயில் இயற்கையின் கொடைதான். இந்தக் காலங்களில் மண்ணில் உருவாகின்ற பல கிருமிகள் இந்த கடும் வெப்பத்தினால் அழிக்கப்படுகின்றன. இதனால் அடுத்துவரும் மழைக்காலத்தில் பயிர்கள் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபடும். அதுபோல் மனிதர்களை தாக்கும் கிருமிகளையும் அழித்துவிடுகிறது.









வெயில் தாக்கம் தணிய சில டிப்ஸ்.. 


  • உச்சி முதல் உள்ள கால் வரை இந்த தாக்கம் இருக்கும் அதனை தணிக்க சின்ன டிப்ஸ்..
    வாரத்துக்கு இரண்டு முறை நன்றாக தலைக்கு, மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக ஊற வைத்து பின்பு குளிக்கவும்.
    இதன் மூலம் உடல் சூடு குறையும்.
    கண்கள் மிகவும் சோர்வடைந்து அதிக எரிச்சல் கொடுக்கும் அதனை போக்க இரவில் தூங்கும் முன்பு கண்களுக்கு விளக்கெண்ய் இரண்டு சொட்டு கண்ண்களுக்கு விடவும். கண்களை சுற்றியும் நன்றாக தடவி விட்டு படுக்கவும். இதனால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
    குளிக்கும் பொழுது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிர் பேஸ்ட் தேய்க்கலாம். அல்லது நூங்குத் தோலை நன்றாக அரைத்து அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பருப்பு மாவு கலந்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் மென்மையகும்.

கோடையினை சமாளிப்போம்

  • வெயில்காலங்களில் நம் அனைவரின் பெரும் பிரச்சனை வியர்வை தான்
    அதனை சமாளிக்க காலையில் வெயில் ஆரம்பம் ஆகும் முன்பே குளிக்கவும்.
    குளிக்கும் தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறை ஊற்றி பின்பு குளிக்கவும்.
    காட்டன் ஆடைகளையும் கொஞ்சம் லூஸான ஆடைகளை போடவும்.
    சிலர் ஒரே ஆடையினை இரண்டு முறை பயன்படுத்திய பின்பு துவைப்பாங்க, ஆனால் இந்த வெயில் காலங்களில் அதிக வியர்வை வெளியாவதால் அதிக கிருமிகள் ஆடைகளில் இருக்கும். துர்நாற்றம் அடிக்கும். ஆகையால் ஒரு நாளுக்கு ஓர் ஆடை போடவும்.

    வெயில் காலங்களில் காரம் குறைவான உணவுகளை சாப்பிடுங்கள். சுடசுட வயிறு முட்ட சாபிட வேண்டாம். மோர், பழவைகளை, தண்ணீர் நிறைய எடுத்துக்கொள்ளவும். வேலைகளையும் சீக்கரமாகவே முடிக்கவும்.
    வீட்டை சுற்றி சின்ன தோட்டமிருந்தால் அதற்க்கு காலை மாலை தண்ணீர் ஊற்றினால் வீடும் குளூமையாக இருக்கும்.
    கதவு, ஜன்னல் ஸ்கீரீனௌ தண்ணீரில் முக்கி போடுங்க. காற்றுபட்டு குளூமையாக இருக்கும்.
    மாலை வந்தவுடன் மீண்டும் ஒரு முறை குளிக்கவும். டார்க் கலர் ஆடைகள் அணிவதை தவிர்த்துவிடவும்...

வெயில் காலங்களில் உங்கள் முகம் மீது அக்கரை காட்டுங்கள்

வெயிலில் அலைவதால் சருமம் கருப்பதை தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய வேலை இது மட்டும் தான்
வெயில் காலம் முடியும் வரை வாரம் ஒரு முறை முகம், கழுத்து, கைகளுக்கு ஹெர்பல் பேக் போடுங்க।
ஐஸ் க்யூப்பை மெல்லிய துணியில் போட்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுங்க முகம் ஃபிரெஷ்ஷாக இருக்கும்
தோல் சீவிய வெள்ளரிப்பழத்தை நன்றாக அறைத்து முகத்துக்கு பேக் போடவும்
।பாதம் எண்ணெயினை குளிர்க்கும் முன்பு உடலில் தேய்த்துக்கொண்டு குளிக்கவும்।
பச்சை பாலை சிறுது பஞ்சில் முக்கி முகத்தில் தடவவும்। காய காய 3, 4 முறை தொடர்ந்து செய்யவும்।




ஓட்ஸ், 2 பாதம்பருப்பு, சிறிது பால் சேர்த்து அரைத்து முகத்துக்கு பேக் போடலாம்.
கை,கால்களில் வாஷலின் அல்லது சன் கீரீம் தடவி பின்பு வெளியே போகவும்.
நிறைய தண்ணீர் குடிங்க... கோடைக்கு குட் பை சொல்லுங்க..


கோடையில் ஓர் குளூமையான பழம்

  • கோடையில் ஓர் குளூமையான பழம்
    வெயிலின் கொடுமையினை சமாளிக்க ஓர் அமிர்தம் தான் தர்பூசினி பழம்
    வெயிலால் முகம் சிலருக்கு கருமையாக மாறும் அதனை தடுக்க தர்பூசணிப்பழசாறுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தேய்க்கவும்.
  • உடல் சூடு தனிய தர்பூசணியுடன் இளநீர் கலந்துக் குடிக்கவும்.
    சிலருக்கு உடல் சூட்டால் வயிற்று வலி வரும் அதனை போக்க சிறிது பதநீர், தர்பூசணிப்பழத்துண்டுகள், ஐஸ் கட்டி சேர்த்து சாபிட்டால் வயிற்று வலி சரியாகும்

  • கோடை காலத்தில் ஏற்படும் பல உடல் உஷ்ணங்களை தீர்க்கும் சக்தி இந்த பழத்துக்கு உண்டு.
    வெயில் காலங்களில் சிலருக்கு கண்கள் சிவந்திருக்கும் அதனை போக்க தர்பூஸ் சாறுடன் பால் கலந்து குடிக்கலாம். இது தொண்டை வலியும் போக்கும்.

    • குளிர்க்கும் முன்பு உடல் முழுவதும் தர்பூசணிப் பழத்தை தேய்த்துக் குளித்தால் உடல் அரிப்பு சரியாகும், கண்கள் மீது வைத்தால் கண்கள் எரிச்சல் சரியாகும்

      தர்பூசணிப் பழச்சாறுடன் மோர் கலந்து குடித்தால் சிறுநீரக எரிச்சல் சரியாகும்.

      தர்பூசணிப் பழவிதைகளை காய வைத்து சிறுது தண்ணீர் ஊற்றி அரைத்து அடி வயிற்றில் பூசினால் நீர்கடுப்பு சரியாகும்.


கத்திரி 

வெயிலின் போது சில சமயங்களில் மழை பெய்யும். அப்படி மழை பெய்தால் மக்களுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும். இதைப்பற்றி நம் முன்னோர்கள் கத்திரி வெயிலின் காலத்தில் மழைபெய்தால் விளைச்சல் குறையும், மக்களை நோய்கள் தாக்கும் என்பார்கள்.

இந்த வெயில் காலத்தில் அதிகம் பாதிக்கப்படும் உறுப்புகளில் தோல் தான் முதன்மை வகிக்கிறது.

சருமத்தை பாதுகாக்க 

வெயில், மழை, பனி என வெளிப்புற சூழ்நிலைக்கேற்ப உடலின் தன்மையை மாற்றியமைப்பது சருமம்தான். வெயில் காலத்தில் முதலில் பாதிக்கப்படுவதும் சருமம் தான். சருமத்தில் பல கோடிக்கணக்கான துவாரங்கள் நிறைந்துள்ளன. இந்த துவாரத்தின் அடிப்பகுதியில் உள்ள வியர்வை சுரப்பிகளில் வியர்வை சுரந்து துவாரங்களின் வழியாக வெளியேறுகிறது.

கோடை வெப்பமானது சருமத்தில் உள்ள ஈரப்பசையை அதிகம் ஊறிஞ்சிவிடுகிறது. மேலும் வியர்வை துவாரங்களில் மாசு படிவதால் வியர்வை நாற்றம் உண்டாகும். சருமத்தில் வியர்குரு கட்டிகள் உருவாகும். சிறு குழந்தைகளுக்கு வேனல் கட்டி, புண்கள் ஏற்படும். அம்மை நோயின் தாக்கங்கள் கூட ஏற்படலாம். 

ஏப்ரல், மே (பங்குனி,சித்திரை, வைகாசி) மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அம்மன் கோவில் திருவிழாக்களில் வேப்பிலை ஆடை அணிந்து கோவிலைச் சுற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வேப்பிலை ஒரு கிருமி நாசினி. உடலில் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இதனால் பழங்காலத்தில் வெப்ப நோயின் தாக்குதலிருந்து விடுபட்டனர்.

· சருமத்தை நன்றாக பராமரித்தாலே கோடை வெப்பத்தின் பிடியிலிருந்து எளிதாக தப்பலாம். 

· கோடை காலத்தில் தினமும் இருமுறை குளிக்க வேண்டும். 

· வெளியில் செல்லும் போது கை, கால்களில் சிறிது எண்ணெய் தடவிச் செல்வது நல்லது. சருமத்தை வறட்சியுறச்செய்யும் பவுடர்களையோ, சோப்புகளையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

· வெயிலில் சென்று வந்தவுடன் அதாவது வியர்வையுடன் குளிக்கவோ, கை, கால், முகம் கழுவவோ கூடாது. சிறிது நேரம் அமர்ந்து வியர்வை காய்ந்தபின் குளிப்பது நல்லது. ஏனென்றால் சருமத்தின் துவாரங்களில் வியர்வை வந்திருக்கும் இந்த துளைகள் வழியாக நீர் உட்புகுந்தால் உடலில் பலவித நோய்களை உருவாக்கும். 

· இறுக்கமான ஆடைகளை உபயோகிக்கக் கூடாது. வெண்மையான பருத்தி ஆடைகள் தான் வெயிலுக்கு ஏற்றது.

· அடிக்கடி நீர் அருந்துவதால் வெப்பத்தில் உறிஞ்சப்படும் நீரை சரி செய்து உடல் சூட்டை சமநிலைப்படுத்தலாம்.

· நீர் சத்து நிறைந்த காய்களான சுரக்காய், பரங்கிகாய், வெள்ளரிக்காய், பூசணிக்காய் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

· தர்பூசனி, ஆரஞ்சு, திராட்சை, வெள்ளரி, கீர்ணிப்பழம், பனைநுங்கு, இளநீர் அருந்துவது நல்லது.

· மோரில் அதிக அளவு நீர் சேர்த்து அருந்துவது நல்லது.

· சருமத்தை பாதிக்காமல் இருக்க பயன்படுத்தும் லோஷன்களை மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது.

· அலர்ஜி ஏற்படுத்தக் கூடிய உணவுகளை தவிர்க்கவும், காரம், புளி அதிகம் சேர்க்கக் கூடாது.

கண்களைப் பாதுகாக்க 

· உச்சி வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.

· கண்களுக்கு நல்ல தரமான சூரிய வெப்ப தடுப்பு (கூலிங்கிளாஸ்) கண்ணாடி அணிந்து செல்லுங்கள். முகத்தை அடிக்கடி கழுவுங்கள், வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

· அக்குள், தொடை இடுக்குகளில் வியர்வையை துடைத்து நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

· கழுத்தின் பின்பக்கம், தலைப்பகுதி அதிகம் வியர்க்கும். அவ்வப்போது தலையை துவட்டி, கழுத்துப் பகுதியை பருத்தியினாலான துணி வைத்து துடைக்க வேண்டும்.

· நல்ல காற்றோட்டம் மிகுந்த அறைகளில் படுக்க வேண்டும். குளிர்சாதன அறையில் தூங்கும்போது வெளிப்புற வெப்பத்தின் அளவைப் பொறுத்தே குளிர்சாதன அறையின் குளிர் தன்மையும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் வெளிப்புற வெப்ப நிலைக்கு எற்ப உடலின் தன்மை அமையும். முற்றிலும் மாறுபட்டிருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

சிறுநீர் நோய் தாக்காமலிருக்க

வெயில் காலத்தில் உடம்பில் தேவையற்ற நீர் வியர்வையாக அதிகம் வெளியேறும். இதனால் சிறுநீர் கொஞ்சம்தான் வெளியேறும். மேலும் உடலில் நீர்ச் சத்து குறைவதால் நீர் எரிச்சல், நீர்த்தாரை எரிச்சல், நீர்க்கடுப்பு உருவாகும். இக்குறை நீங்க அடிக்கடி சுத்தமான நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் பருகினால்தான் உடலின் நீர்ச்சத்தையும் உடல் வெப்பத்தையும் சீர்படுத்த முடியும்.

மோர், எலுமிச்சை ஜூஸ் மதிய வேளையில் பருகுவது நல்லது. 

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து எளிதில் விடுபட்டு கோடை விடுமுறையை குழந்தைகளுடன் உற்சாகமாக கொண்டாடுங்கள்.