Wednesday, September 12, 2012

முதலாம் ஆண்டு திருமண கொண்டாட்டம்...

முதலாம் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்


அன்பு சொந்தங்களுக்கு வணக்கம் என்னுடைய முதலாம் ஆண்டு திருமண நாளில் என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள் பல கோடி....

என்னுடைய திருமண நாள் கொண்டாட்டமாக என்னாள் முடிந்த உதவியாக என்னுடைய கிராமத்திற்க்கு அருகிலுள்ள இருளர் சமுதாயத்தை சேர்ந்த 160 மாணவர்களுக்கும்,சமுதாயத்தில் பின் தங்கியுள்ள 66 மாணவர்களுக்கும் அவர்களின் படிப்பிற்கு தேவையான உபகரணங்களையும் இனிப்பையும் நானும் எனது மனைவியாரும் பள்ளி
மாணவர்களுக்கு வழங்கினோம்.



அப்போது மாணவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியை பாத்தது மீண்டும் கிடைக்காத ஒரு நிகழ்வு...



பள்ளியை சேர்ந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் எங்களுக்கு பொன்னடை போர்த்தி எங்களை வாழ்த்திய நினைவு எங்களால் மறக்க முடியாத ஒன்று..

என் முதலாம் ஆண்டு திருமணநாள் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு.. இணைய உறவுகளும் இதனை பின்பற்றி மற்றவர்களிடமிருந்து வேறுபடுவோம்..


புகைப்படங்களில் சில...