Sunday, July 3, 2022
Friday, January 22, 2021
இயற்கையை நாம் அழிக்க
நினைத்தால் இயற்கை
நம்மை அழித்துவிடும்.
மனதில் பல துன்பங்கள்
இருந்தாலும் இனிய
சாரலோடு மழையில்
நனையும் போது
துன்பங்கள் கூட
சந்தோசமாக
மாறி விடுகிறது..
பொழியும் மழைத்
துளிகளுக்கு தெரிவதில்லை
பல உயிர்களின் தாகத்தை
தீர்க்கத் தான் சென்று கொண்டு
இருக்கிறோம் என்று..
தங்கள் வீடுகளை இழந்து
அகதிகளாக அலையும்..
பறவைகளுக்கு தான்
புரியும் மரங்களின் அருமை.
தினமும் இரவு வந்தால்
கருப்பு நிற உடையை
அணிந்து கொள்கிறது பகல்.
சில நொடிப் பொழுது
வாழ்ந்தாலும் தானும்
குதூகலமாகவும் தன்னை
ரசிப்பவர்களையும்
பரவசமாக்கும் பனித்துளி.
மரத்தடியில் உதிர்ந்து
கிடக்கும் மலர்கள்..!
தன்னை வளர்த்து விட்ட
வேர்களை மரம் பூப்போட்டு
வணங்குகிறதா..?
கடல் அலைகளுக்கு
எவ்வளவு அன்பு கரைகள்
மீது ஒவ்வொரு முறையும்
முத்தமிட்டு தன் அன்பை
வெளிப்படுத்துகின்றன.
இந்த உலகில் யாரும்
அனாதை அல்ல
இனிமையை தர காற்றும்
வழிகாட்ட வானமும்
இருக்கும் வரை.
இயற்கை செழிக்க
வைத்தால் இயற்கை
நம்மை செழிக்க வைக்கும்.
இயற்கையை நாம் அழிக்க
நினைத்தால் இயற்கை
நம்மை அழித்து விடும்.
Friday, April 27, 2018
Monday, April 2, 2018
கோடையில் வெயில், வெக்கை, வியர்வை... விரட்ட துணைநிற்கும் உணவுகள் #SummerTips
கோடையில் வெயில், வெக்கை, வியர்வை... விரட்ட துணைநிற்கும் உணவுகள் #SummerTips




செய்முறை: தக்காளியையும் வெள்ளரியையும் கழுவி சுத்தப்படுத்தியபின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை இதனுடன் கலந்துப் பரிமாறவும். இதைச் சாலடாகவும், சாண்ட்விச் ஸ்டஃபிங்காகவும் பயன்படுத்தலாம்.
செய்முறை: பாதாமை முதலில் அரைத்துக்கொண்டு, பின் மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். உடனே சாப்பிட ரெடி!
Saturday, May 27, 2017
சட்டை பட்டன் ஏன் பெண்களுக்கு இடதுபக்கமும் ஆண்களுக்கு வலதுபக்கமும் இருக்கு?... தெரியுமா உங்களுக்கு....
அப்படி ஒரு விஷயம் தான் நாம் தினமும் அணிகிற சட்டையில் உள்ள பட்டன். அதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா என்று தெரியாது. நாம் தினமும் அணியும் சட்டையில் ஆண்கள் அணியும் சட்டையில் உள்ள பட்டன் வலதுபுறமாகவும் பெண்கள் அணியும் சட்டையில் உள்ள பட்டன்கள் இடதுபுறமாகவும் வைத்துத் தைக்கப்பட்டிருக்கும்.
அதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? இப்பவாச்சும் தெரிஞ்சிக்கோங்க...
விக்டோரியா மகாராணி காலத்திலேயே ஆண், பெண் இருவருமே சட்டை அணிந்து கொள்ளும் பழக்கம் இருந்தது. குறிப்பாக, பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் பட்டன் வைத்த சட்டையை அதிகம் அணிந்தனர்.
ஆரம்ப காலத்தில் அவர்கள் அணியும் சட்டையில் பின்புறத்தில் தான் பெரிதும் பட்டன் வைத்துத் தைக்கப்பட்டது. அவர்களுடைய வீடுகளில் உள்ள பணிப்பெண்கள் தான் அவர்களுக்கு பட்டன் போட்டுவிடுவார்கள்.
அவ்வாறு பட்டன் போட்டுவிடும்போது, பெண்களுக்கு வலதுபக்கம் கையிலிருந்து இடப்பக்க பட்டன் ஓட்டையில் மாட்டிவிடுவார்கள். இந்தமுறையே பட்டன் போடுவதற்கு மிக சுலபமாக இருந்ததால் அதுவே தொடர்ந்து பழக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
ஆண்களுடைய சட்டையைப் பெரும்பாலும் அவர்களே அணிந்து கொள்வதால் அவர்களுக்கு வலது புறத்தில் பட்டன் வைத்துத் தைக்கப்பட்டது.
Friday, May 26, 2017
வாழ்வில் முன்னேற.
வேண்டுமெனில் உன்னுடைய
கால்களால் நடந்து போ
மற்றவா்களின் முதுகில் ஏறி போகாதே .
பாலம்
பாலம் கட்டிய பிறகு வாகனங்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது..!
வாழ்த்துக்கவிதை
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்!
வாழ்த்துக்கள்
வாழ்க்கையின்
ஜீவநாடிகள்!
வாழ்த்துவோரும்
வாழ்த்தப்படுவோரும்!
நன்மை கொள்வதென்னவோ!
கோடி!
வாழ்த்தின் மேன்மை அறிந்து!
இயற்கையைப் போற்றுவோம்!
தாய்தந்தை போற்று வோம்!
நம்மை நாமே!
வாழ்த்திக்கொள்வோம்!
நம் எண்ணங்கள்
ஏகாந்தம் பெற!
இன்னலில்லா!
வாழ்வுதனை
பெற்று இன்பம்
சேர்த்து!
ஈகை பாராட்டி!
போற்றுதலோடு
வாழ்த்துப் பெற்று!
அகம் மகிழ்ந்து!
ஆனந்தம் பாடி!
இன்பத்தோடு
ஈகை உள்ளத்தோடு!
ஊன்றுகோலாய்
எவ்வேலையிலும்!
ஏற்றம் கண்டு!
ஐயம் தெளிந்து!
ஒலிஒளியாய்!
ஓதுதலில் வெற்றிக்கொண்டு!
ஔதடமே! இல்லா
அஃதொரு
வாழும் பாதை
அமைத்து!
வாழ்த்துக்கள் பலவற்றோடு!
குருநெறியில்
வாழ்ந்திட!
வாழ்வின் நோக்கம்!
விளங்கிடுமே!
Monday, April 17, 2017
நன்செய் நிலங்களில் சேற்று நெல் சாகுபடி செய்வது எப்படி?
விதையளவு
விதை நேர்த்தி
நாற்றங்கால் தயாரிப்பு
களை நிர்வாகம்
நீர் மேலாண்மை
அறுவடை
Thursday, October 27, 2016
நீங்கா நினைவுகள்......
Wednesday, October 26, 2016
Monday, October 24, 2016
உணர்வு
நம்மை யாரும் வெறுக்க கூடாது!
நாம் வாழ்ந்து முடிந்த பின்பு
நம்மை யாரும் மறக்க கூடாது!!
அன்பு
கிடைத்தவர்களுக்கு
தெரியாது!
கிடைக்காதவர்களுக்கு
புரியாது!
தொலைத்தவர்களுக்குத்தான்
தெரியும்
அதன் அருமை!
புரிதல்
கோபம் கூட அர்த்தம்
உள்ளதாய் தெரியும்!
புரியவில்லை என்றால்
அன்பு கூட அர்த்தம்
அற்றதாய் தெரியும்!
பாசம்
ஒருவர் மேல்
பாசம் வைக்கும்
முன் தெரிந்துகொள்...
உனக்கு
அந்த உறவு,
நிரந்தரமானது அல்ல...
உன்னை விட்டு
ஒருநாள் பிரியுமென்று...
சில மனிதர்கள்
ஏன் வாழ்கிறோம் என
புரிய வைக்கின்றனர்!
சில நேரங்களில் சில மனிதர்கள்
இன்னும் ஏன் வாழ்கிறோம் என
நினைக்க வைக்கின்றனர்!!







