முகப்பு
சுற்றுச்சூழல்
மக்கள் நலம்
விவசாயம்
கவிதைகள்
Monday, October 24, 2016
அன்பு
தகுதி அற்றவர்களிடம்
நீ வைக்கும் அன்பு
தயக்கம் இன்றி
உன்னை தவிக்க விட்டு
செல்லும்!
புரிதல்
புரிந்து கொண்டால்
கோபம் கூட அர்த்தம்
உள்ளதாய் தெரியும்!
புரியவில்லை என்றால்
அன்பு கூட அர்த்தம்
அற்றதாய் தெரியும்!
பாசம்
அளவுக்கு அதிகமாக
ஒருவர் மேல்
பாசம் வைக்கும்
முன் தெரிந்துகொள்...
உனக்கு
அந்த உறவு,
நிரந்தரமானது அல்ல...
உன்னை விட்டு
ஒருநாள் பிரியுமென்று...
சில மனிதர்கள்
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஏன் வாழ்கிறோம் என
புரிய வைக்கின்றனர்!
சில நேரங்களில் சில மனிதர்கள்
இன்னும் ஏன் வாழ்கிறோம் என
நினைக்க வைக்கின்றனர்!!
கவலை
உனக்காக யாரும்
இல்லை
என்ற கவலை
வேண்டாம்!
உனக்காக
அழுவதற்கு
உன் கண்கள்
இருக்கிறது!!
துடைப்பதற்கு
உன் கைகள்
இருக்கிறது!!!
எச்சரிக்கை
அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே
அடிமை ஆக்கி விடுவார்கள்!
அதிகம் பொறுமையுடன் நடக்காதே
பைத்தியம் ஆக்கி விடுவார்கள்!!
எல்லாம் வெளிப்படையாக இருந்துவிடாதே
வெறுமை ஆக்கி விடுவார்கள்!!!
எல்லாரையும் நம்பி விடாதே
ஏமாளி ஆக்கி விடுவார்கள்!!!!
கோபப்படாமல் இருந்து விடாதே
கோமாளி ஆக்கி விடுவார்கள்!!!!!
வலிகள்
வலிகள்
அதிகமான அன்பு
அதிகமான நம்பிக்கை
அதிகமான ஆசை
இருக்க கூடாது!
மீறினால் வலிதான்!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)