Tuesday, January 29, 2013

மலர்



பூவின் மொட்டுக்கள் போல
மௌனமாக இருக்காமல்...
மலர்ந்த பூக்கள் போல
எப்போதும்
சிரித்துக் கொண்டே இருங்கள்...!

மலர்கள்



காலை முதல் மாலை வரை சிரித்தேன்...!
பரிசாக கிடைத்தது
மரண தண்டனை...
-இப்படிக்கு மலர்கள்.

மீனவன்



மீன் சாப்பிடக்கூடாது
என்றிருந்தேன்...
இப்போது சாப்பிடுகிறேன்
மீனவன் சாப்பிடுவதற்காக...

முடியாது...



காரணம் இல்லாமல்
சிரிக்கலாம்...
ஆனால், கவலை இல்லாமல்
அழ முடியாது...

முடிவு



யோசனை யாரிடம்
வேண்டுமானாலும் கேள்...!
ஆனால்...
முடிவை நீ மட்டும் எ
டு .

முயற்சி



முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல ,
நீ நினைத்ததை
முடிக்கும் வரை ...

மொழிகள்




தமிழ் முதல்
சீனம் வரை
பல மொழிகள் புரிகிறது...
உன் விழிகள் பேசும்
வார்த்தை மட்டும்
புரியவில்லை...!