முகப்பு
சுற்றுச்சூழல்
மக்கள் நலம்
விவசாயம்
கவிதைகள்
Monday, October 24, 2016
கவலை
உனக்காக யாரும்
இல்லை
என்ற கவலை
வேண்டாம்!
உனக்காக
அழுவதற்கு
உன் கண்கள்
இருக்கிறது!!
துடைப்பதற்கு
உன் கைகள்
இருக்கிறது!!!
எச்சரிக்கை
அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே
அடிமை ஆக்கி விடுவார்கள்!
அதிகம் பொறுமையுடன் நடக்காதே
பைத்தியம் ஆக்கி விடுவார்கள்!!
எல்லாம் வெளிப்படையாக இருந்துவிடாதே
வெறுமை ஆக்கி விடுவார்கள்!!!
எல்லாரையும் நம்பி விடாதே
ஏமாளி ஆக்கி விடுவார்கள்!!!!
கோபப்படாமல் இருந்து விடாதே
கோமாளி ஆக்கி விடுவார்கள்!!!!!
வலிகள்
வலிகள்
அதிகமான அன்பு
அதிகமான நம்பிக்கை
அதிகமான ஆசை
இருக்க கூடாது!
மீறினால் வலிதான்!!
பாசம்
பாசம்
சில சமயங்களில் அன்பானவர்களிடம்
அதிகம் கோபத்தை காட்டி விடுகிறோம்!
எப்படியும் நம்மை மன்னித்து விடுவார்கள்
என்ற குருட்டு நம்பிக்கையில்!!
வெற்றிடம்
வெற்றிடம்
நாம்
இல்லாவிட்டால்
யாரும்
வருந்துவதில்லை!
நம் இடத்திற்கு
வேறு ஒருவரை
தேர்ந்தெடுக்கிறார்கள்!!
போரட்டம் தொடரும்...
போரட்டம் தொடரும்...
தேவைப்படும் போது பழகுவதும்
தேவை இல்லாதபோது எடுத்தெரிவதும்
இருக்கும் வரை!
மனித உறவுகளுக்குள்
ஏமாற்றங்களும்
மன போராட்டங்களும்
தொடரத்தான் செய்யும்!!
வலிகள் நிறைந்தது வாழ்க்கை
வலிகள் நிறைந்தது வாழ்க்கை
ஒருவரை இழக்கும் போது
வரும் கண்ணீரை விட,
அவர்களை இழக்க கூடாது
என்று நினைக்கும் போது
வரும் கண்ணீருக்கு தான்
வலி அதிகம்!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)