Wednesday, February 29, 2012

பணி ஓய்வு கவிதை...







உங்களை வாழ்த்த வயதில்லை
இருந்தாலும் வாழ்த்துகிறேன்...


வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும்
நம் தலைமுறை...


தந்தையைப் பிரிந்தால் அது கரு!

நிஜத்தை பிரிந்தால் அது நிழல்,

மண்ணில் விதைத்தால் அது வீரம்!

இரவைப் பிரிந்த பொழுதுதான் காலை,

இமைகள் பிரிந்தால்தான் பார்வை,

உழைத்துக் களைத்தால்தான் வேர்வை!

நாங்கள் வேண்டுவதோ உங்கள் உறவை!

விண்ணைப் பிரிந்தால் மழைத்தண்ணீர்,

உங்களைப் பிரியும் எம் கண்ணில் கண்ணீர்!

நாங்கள் பிறந்தது வேறுவேறு தாய்க்கு,

ஆயினும் பிள்ளைகள்
இந்த தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
எனும் தாய்க்கு!

 நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும்
நாங்கள் உங்களிடம் எதிர்பார்பது....
நாங்கள் உங்களிடம் எதிர்பார்பது.....

 என்றும் உங்கள் ஆசீர்வாதம் மட்டுமே…

No comments:

Post a Comment